பலதும் பத்தும்

மேன்ஹன்ட் இன்டர்நேஷனல் 2025 – இலங்கைக்கு இரண்டாவது இடம்..!

மேன்ஹன்ட் இன்டர்நேஷனலின் 23 ஆவது பதிப்பில் இலங்கையைச் சேர்ந்த பியுமல் சித்தும் பட்டுவேராச்சி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

2025 ஆம் ஆண்டுக்கான மேன்ஹன்ட் இன்டர்நேஷனல் போட்டி நேற்று (10) பாங்காக்கில் நடைபெற்றது.

நீண்ட காலமாக நடைபெற்று வரும் சர்வதேச ஆண் மாடலிங் போட்டிகளில் ஒன்றான மேன்ஹன்ட் இன்டர்நேஷனல் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த பியுமல் சித்தும் பட்டுவேராச்சி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். மேலும் அவர் நீச்சலுடை டிஜிட்டல் வெற்றியாளர் பட்டத்தையும் வென்றார்.

பிரான்சைச் சேர்ந்த அடோனிஸ் ரெனாட் மேன்ஹன்ட் இன்டர்நேஷனல் 2025 பட்டத்தை வென்றார். ஜமைக்காவைச் சேர்ந்த ரைம் ரைட் இரண்டாவது ரன்னர்-அப் இடத்தைப் பிடித்தார். பிலிப்பைன்ஸைச் சேர்ந்த ஜோர்டான் சான் ஜுவான் மற்றும் வியட்நாமைச் சேர்ந்த வு லின் நுயென் ஆகியோர் முதல் ஐந்து இடங்களைப் பிடித்தனர்.

மேன்ஹன்ட் இன்டர்நேஷனல் 1993 ஆம் ஆண்டில் மெட்ரோமீடியா சிங்கப்பூர் மற்றும் புரோகான் லெஷர் இன்டர்நேஷனல் ஆகியவற்றால் நிறுவப்பட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button