இந்தியா

வழமைக்கு திரும்பிய காஷ்மீருக்கான விமான போக்குவரத்து

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பழிவாங்கும் வகையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பகுதிகள் மீது இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தியது.

இதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் எயார் இந்தியா, இண்டிகோ விமான சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டன. ஸ்ரீநகர் உள்பட 32 விமான நிலையங்களில் போக்குவரத்து சேவை முற்றிலும் நிறுத்திவைக்கப்பட்டன.

இந்நிலையில், பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான போர் முடிவுக்கு வந்த நிலையில், காஷ்மீரில் நேற்று முதல் மீண்டும் விமான சேவை தொடங்கியது.

தலைநகர் புதுடெல்லியில் இருந்து புறப்பட்ட எயார் இந்தியா விமானம் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் மதியம் 12.49 மணிக்கு சென்று சேர்ந்தது.

விமான சேவை சீரானதால் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் காஷ்மீருக்குப் படையெடுப்பார்கள் என்பதால், அங்குள்ள வியாபாரிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *