விடத்தல்தீவு இராணுவ முகாம்; 25 இராணுவ வீரர்கள் பாதிப்பு!

மன்னார், விடத்தல்தீவு பகுதியில் உள்ள இராணுவ முகாமில் சுமார் 25 இராணுவ வீரர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

இவர்களுக்கு காய்ச்சல் பரவியதையடுத்து, அங்குள்ள இராணுவ வீரர்களை குறித்த முகாமிலேயே தனிமைப்படுத்தியுள்ளதாக இராணும் தெரிவித்துள்ளது.

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இராணுவ வீரர்கள் குழுவொன்றை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் ஒருவர் சிகிச்சைக்காக ஐ.டி.எச். வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

முகாமில் உள்ள மேலும் 500 இராணுவத்தினரை தனிமைப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் பிரதேச சுகாதார திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button