முச்சந்தி

திடீர் வெள்ளத்தால் ஸ்பெய்னில் 51 பேர் உயிரிழப்பு!

ஸ்பெய்னின் தென்கிழக்குப் பகுதியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட பேரழிவுகரமான திடீர் வெள்ளத்தால் குறைந்தது 51 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஸ்பெய்னின் கிழக்குப் பகுதியான வலென்சியாவில் ஒரு வருடத்திற்கும் அதிகமான மழை வீழ்ச்சு வெறும் எட்டு மணி நேரத்தில் பதிவானதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால், எந்தவொரு போக்குவரத்து நடவடிக்கைகளையும் தவிர்க்கவும், அனர்த்தம் தொடர்பில் வழங்கப்படும் புதுப்பிப்புகளை பின்பற்றுமாறும் உள்ளூர் அதிகாரிகள் பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

வெள்ளம் தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியான காட்சிகள், வெள்ள நீர் பரந்த பகுதிகளை மூழ்கடித்துள்ளதையும், பாலங்கள் இடிந்து வீழ்ந்துள்ளதையும், வாகனங்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்வதையும் வெளிக்காட்டுகின்றன.

1,000 க்கும் மேற்பட்ட வீரர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் ஸ்பெயின் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button