சீனாவுடன் இணைக்கப்படுவதை கடுமையாக எதிர்ப்போம்; தைவான் ஜனாதிபதி சூளூரை

சீனாவுடன் தைவான் இணைக்கப்படுவதை கடுமையாக எதிர்ப்போம் என தைவானின் ஜனாதிபதி லாய் சிங் டே, சூளுரைத்துள்ளார்.

சுயாட்சியுடன் செயல்படும் தைவான் தனது நாட்டின் ஒரு பகுதி என்றும் அந்நாட்டை இணைத்துக் கொள்ள இராணுவப் பலத்தைக்கூட பயன்படுத்த தயங்க மாட்டோம் என சீனாவும் எச்சரித்துள்ளது.

தைவானின் தேசிய தின நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி லாய் சிங் டே, “இணைப்பை எதிர்க்கும் கடப்பாட்டையும் எங்களுடைய இறையாண்மையில் நுழைவதையும் கடுமையாக எதிர்ப்போம்.” எனக் கூறியுள்ளார்.

லாய் சிங் டே, கடந்த மே மாதம் ஜனாதிபதியாக பதவியேற்றதிலிருந்து சீனா, பல்வேறு நெருக்கடிகளை தைவானுக்கு கொடுத்து வருகிறது.

முன்னாள் ஜனாதிபதி டிசாய் இங்-வென்னைவிட லாய் சிங் டே, சீனாவுக்கு எதிராக வெளிப்படையாக பேசி வருவதால் சீனா கோபமடைந்துள்ளது.

இதனால் தைவான் தேசிய தினக் கொண்டாட்டதை எதிர்க்கும் நோக்கில் சீனா இராணுவப் பயிற்சிகளை நடத்தலாம் என அமெரிக்க எச்சரித்திருந்தது. அதன் பிரகாரம் சில நகர்வுகளில் சீனாவும் ஈடுபட்டது.

தைவானின் இறையாண்மை பற்றி பேசும் லாயை ‘பிரிவினைவாதி’ என பெய்ஜிங் குறிப்பிடுவதுடன், தைவானின் தாய்நாடு சீனா அல்ல என்று லாய் கூறியதை கண்டித்துள்ள சீனா, “ லாய் சிங் டேவின் உரை விரோதத்தையும் மோதலையும் அதிகரிக்கும் தீங்கை நோக்கமாகக் கொண்டது.” என்றும் சீனா குற்றம் சுமத்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button