“விருப்பு வாக்கு எண்ணும் போது முறைக்கேடுகள் இடம்பெற்றுள்ளன“: ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் இரண்டாவது விருப்பு வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது.

தேவையேற்படின் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில வாக்கு எண்ணும் மையங்களில் தமது கட்சியின் முகவர்கள் இன்றி விருப்பு வாக்கு எண்ணப்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

“ கட்சி முகவர்கள் முன்னிலையில் இரண்டாவது விருப்பு தேர்வு எண்ணப்பட வேண்டும் என கேட்டுக்கொண்ட போதிலும் வாக்கு எண்ணும் மையங்களுக்குள் முகவர்கள் அனுமதிக்கப்படவில்லையென குற்றம் சுமத்தியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button