கொக்கட்டிச்சோலை கிராமத்தில் மாபெரும் ஜோதிர்லிங்க கண்காட்சி ஆரம்பம்

கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை கிராமத்தில் அமைந்துள்ள தான்தோன்றீஸ்வரம் ஆலயத்திற்கு முன்பாக உள்ள சிவ அரண்மனையில் 12 ஜோதிர் லிங்க தரிசனம் (15) ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகியது.

விசேட தரிசனமானது குறித்த ஆலய மகோற்சவத்தை முன்னிட்டு,பத்தாம் வட்டாரம் கொக்கட்டிச்சோலை தெற்கில் அமையப்பெற்றுள்ள ஜோதிர்லிங்க கலைக்கூடத்தில் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை பக்தர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் விசேடமாக, தண்ணீர்ப்பந்தல் 12 ஜோதிர்லிங்க தரிசனம் ஆன்மீக படவிளக்கக் கண்காட்சி ஆகியவை மிகவும் சிறப்பான முறையில் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது .

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button