ஜப்பானில் கத்தரிக்கோல் மாயம்: விமானங்கள் ரத்து
ஜப்பானில் கத்தரிக்கோல் மாயமானதால் 36 விமானங்கள் ரத்தான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பானின் விமான நிலையத்திலுள்ள கடையொன்றிலிருந்து ஜோடி கத்தரிக்கோல் காணாமல் போயுள்ளது.
இதற்கமைய, Hokkaido பகுதியில் அமைந்துள்ள New Chitose விமான நிலையத்தின் உள்ளூர் விமான சேவைகளுக்கான முனையம் சுமார் 2 மணி நேரம் ஸ்தம்பித்ததால் நூற்றுக்கணக்கான பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
குறித்த கத்தரிக்கோல் சனிக்கிழமை (17) அதே கடையில் காணமால் போயுள்ளதாகவும் ஞாயிற்றுக்கிழமை (18) பொலிஸாரால் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![]()