நாளை வரலட்சுமி விரதம் 2024 ; தாலி மாற்ற சிறந்த நேரம் எது

ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை வரலட்சுமி பூஜை கொண்டாடப்படும். இந்த பூஜையை யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் பெரும்பாலும் வீட்டில் பெண்களே செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த வருடம் வரலட்சுமி விரதம் எப்போது? லட்சுமி தேவியை வழிபடுவதற்கு உகந்த நேரம் என்ன? வழிபடும் முறை என்னபவற்றை தெரிந்து கொள்ளுங்கள்.

Oruvan

வரலட்சுமி பூஜை எப்போது?

ஆடி மாதத்தின் நிறைவு நாளும், ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையுமான ஓகஸ்ட் 16ம் திகதி வரலட்சுமி விரதம் வருகிறது.

நாளைய தினம் மகாவிஷ்ணுவிற்குரிய வளர்பிறை ஏகாதசி விரதமும் வருவது மற்றொரு தனிச் சிறப்பாகும்.

அன்றைய தினம் மூலம் நட்சத்திரத்துடன் இணைந்து வருகிறது. மூல நட்சத்திரம் என்பத அன்னை சரஸ்வதி தேவிக்குரிய நட்சத்திரமாகும்.

அதனால் இந்த ஆண்டு ஆடி கடைசி வெள்ளியில் விரதம் இருந்து வழிபட்டால் மூன்று தேவியர்களை வழிபட்ட பலனும், அவர்களின் அருளும் கிடைக்கும்.

Oruvan

மகாலட்சுமியை வீட்டிற்கு அழைக்க உகந்த நேரம் : 15 ஓகஸ்ட் 2024 – மாலை 6 மணி முதல் 8 மணி வரை

16 ஓகஸ்ட் 2024 – காலை 6 மணி முதல் 7:20 வரை

வரலட்சுமி பூஜை செய்வதற்கான உகந்த நேரம்: 16 ஓகஸ்ட் 2024 – காலை 9 மணி முதல் 10:20 மணி வரை.

அது போல அன்று மாலை 6 மணிக்கு மேல் புனர்பூஜை செய்வதற்கான உகந்த நேரம்: 17 ஓகஸ்ட் 2024 – காலை 7:35 மணி முதல் 8:55 மணி வரை.

அதுபோல் அன்று காலை 10:35 மணி முதல் 12 மணி வரை

18 ஓகஸ்ட் 2024 – காலை 7:45 மணி முதல் 8:45 மணி வரை. அதுபோல அன்று காலை 10:45 மணி முதல் 11:45 மணி வரை

Oruvan

வரலக்ஷ்மி விரதம் எப்படி கொண்டாடப்படுகிறது?

வரலட்சுமி பூஜையை வியாழன், வெள்ளி, சனி என்று மூன்று நாட்கள் செய்யலாம்.

3 நாட்கள் செய்ய முடியாவிட்டால் வெள்ளிக்கிழமை நாளில் செய்வது நல்லது.

மகாலட்சுமியை வியாழக்கிழமை அழைத்து வெள்ளிக்கிழமை பூஜை செய்யப்படுகிறது.

சனிக்கிழமை புனர்பூஜை செய்யப்படுகிறது. திருமணமான பெண்கள் வியாழன் அன்று சூரிய உதயம் முதல் சூரியன் மறையும் வரை விரதம் இருந்து பூஜைக்கான ஏற்பாடுகளைச் செய்வார்கள்.

வெள்ளிக்கிழமையன்று பக்தர்கள் அதிகாலையில் எழுந்து சூரிய உதயத்திற்கு முன்பாக தலைக்கு குளித்து, வீட்டை சுத்தம் செய்து ரங்கோலி போட்டு கலசத்தால் வரலட்சுமியை அலங்கரிப்பார்கள்.

கலசத்தில் சந்தனம் பூசப்பட்டு, அரிசி, நாணயங்கள், மஞ்சள் மற்றும் இலைகளால் நிரப்ப வேண்டும்.

பின்னர் ஒரு ‘ஸ்வஸ்திகா’ சின்னம் வரையப்பட வேண்டும்.

கடைசியாக, கலசத்தை மா இலைகளால் அலங்கரித்து, மஞ்சள் தடவிய தேங்காயை மூடி வைக்க வேண்டும்.

விநாயகப் பெருமானை வணங்கி, ஸ்லோகங்களைச் சொல்லி, ஆரத்தி செய்து, தெய்வத்திற்கு இனிப்புகளை வழங்குவதன் மூலம் பூஜை தொடங்குகிறது.

பெண்கள் தங்கள் கைகளில் மஞ்சள் இழைகளைக் கட்டிக்கொண்டு பூஜையை தொடங்குவார்கள்.

புழுங்கலரிசி, பொங்கல் மற்றும் வெல்லத்தால் செய்யப்பட்ட இனிப்புகள் நிவேதமாக வைக்கப்படும்.

பக்தர்கள் சனிக்கிழமையன்று சடங்குகளை முடித்து, குளித்த பிறகு கலசத்தை அகற்றுகிறார்கள்.

வரலக்ஷ்மி விரதத்தைக் கடைப்பிடிப்பது அமைதி, செழிப்பு மற்றும் நிதி ஆசீர்வாதங்களைக் கொண்டு வருவதாக நம்பப்படுகிறது.

மேலும் கலசத்தின் அருகில் குத்து விளக்கு ஏற்றுவது கூடுதல் சிறப்பு ஆகும்.

இந்த பூஜையை வெள்ளிக்கிழமை காலை 10.20 மணிக்குள் செய்து முடிக்க வேண்டும். வரலட்சுமி பூஜை செய்யும் நேரத்தில் தாலிச்சரடு மாற்றிக் கொள்ள விரும்பும் பெண்கள் மாற்றிக் கொள்ளலாம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button