5 குழந்தைகளை போல் வயிற்றில் தோற்றமளித்த 15 கிலோ கட்டி

இலங்கைத்தீவின் தென்பகுதியான ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் தாய் ஒருவரின் வயிற்றில் பதினைந்து கிலோகிராம் கட்டி ஒன்று வெற்றிகரமாக அகற்றப்பட்டதாக சத்திரசிகிச்சையை மேற்கொண்ட மகப்பேறு மருத்துவர் சமந்த சமரவிக்ரம தெரிவித்தார்.

வீரகட்டிய பிரதேசத்தில் வசிக்கும் முப்பத்தெட்டு வயதுடைய ஒரு பிள்ளையின் தாய் ஒருவருக்கு  இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

தற்போது தாய் நலமுடன் இருப்பதாக அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மருத்துவர் சமந்த சமரவிக்ரம தெரிவிக்கையில்,

இரண்டு உதவி வைத்தியர்கள், ஒரு மயக்கவியல் நிபுணர் மற்றும் மூன்று தாதிகள் அடங்கிய குழுவினால் இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

பல ஆண்டுகளாக அவரது வயிறு படிப்படியாக வீங்கி வருவந்ததால் அவருக்கு பல்வேறு மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனாலும், அவரை குணப்படுத்தமுடியவில்லை. தொடர்ந்து ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலைக்கு வந்து மகப்பேறு மற்றும் மகப்பேறு வைத்திய நிபுணரைச் சந்தித்தார்.

ஏனெனில், அவரது வயிறு பாரம் தாங்க முடியாமல் நீண்டுகொண்டிருந்தது. அவரது உடல்நிலை சரியாக கண்டறியப்பட்டு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக சிறப்பு மருத்துவர் சமந்தா சமரவிக்ரம தெரிவித்தார்.

இந்த நோய் ஒரு நார்த்திசுக்கட்டி நோய் (Fibroid) என்றும் திசுக்கள் வீக்கம் மற்றும் முடிச்சு காரணமாக இந்த நிலை ஏற்படுவதாகவும் மருத்துவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்னும் சில நாட்களுக்கு உரிய சிகிச்சை பெறவில்லை என்றால் அவர் உயிரிழந்திருப்பார் என்றும் மருத்துவர் சமந்தா சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.

அனைத்து தாய்மார்களுக்கும் வயிற்றில் ஏதேனும் வலி ஏற்பட்டால் விசேட வைத்தியரிடம் பரிசோதிக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

Oruvan

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button