ரணில் – பசில் சந்திப்பு; இனி நடைபெறுமா?

இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பிலும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிறுவுநர் பசில் ராஜபக்சவுக்கும் இடையில் ஒவ்வொரு வாரமும் இடம்பெற்று வரும் சந்திப்பில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

கடந்த வாரம் இடம்பெற்ற சந்திப்பில் ஜனாதிபதியின் சார்பில் மேலும் பல அரசியல்வாதிகள் கலந்துகொண்டமையே இந்தக் குழப்பத்துக்குக் காரணம்.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, மஹிந்த அமரவீர, துமிந்த திஸாநாயக்க மற்றும் வஜிர அபேவர்தன ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதைப் பசில் விரும்பவில்லை. இந்தச் சந்திப்பில் பஸிலுக்கும் பிரசன்னவுக்கும் இடையில் வாய்த்தர்க்கமும் ஏற்பட்டது.

இதனால் அடுத்த சந்திப்பு இடம்பெறுமா என்பது சந்தேகமே. அப்படி இடம்பெற்றாலும், வழமைபோல் பசிலும் ரணிலும் மாத்திரமே கலந்துகொள்ள வேண்டும் என்று பஸில் தரப்பு தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button