பாரதியும் நினைத்திருந்தால் போதையில் மிதந்திருப்பான்?… கவிதை …. சங்கர சுப்பிரமணியன்.

பாலும் நீரும் சேரும் வியப்பில்லை
உறவுகள் சேராது தனித்து நிற்பினும்சேராது என்று தெரிந்தும் முயன்றன்ஏதோ ஒரு நப்பாசையில் சுழன்றானநிராசை அதுவும் நிறைவேறவில்லைமுடியாதென்று அவனுக்கு தெரிந்தும்அவன் எதற்காக முயன்று பார்க்கிறான்அவனாக முயன்று பார்க்கவில்லைமுயன்று பார்த்திட உந்தப்பட்டான்
நாயின் வாலை நிமிர்த்தவும் முடியுமாமுடியாதுபோயின் நாயின் குற்றமாகுமாமுயன்றவன் குற்றமே குற்றம் நாயிடமன்றுபட்ட மரம் துளிர்ப்பதும் இங்கில்லையாபருவம் மாறி மழை பொழிவதில்லையாகெட்டவன் நல்லவனாய் மாறவில்லையாகெடுதலும் நல்லதாய் முடிவதுமில்லையாஇவனைப் பார்த்து அவன் சிரிக்கிறான்அவனைப் பார்த்து இவன் சிரிக்கிறான்உதட்டில் மட்டும்தான் சிரிப்பு தெரியுதுஉள்ளத்தில் அதன் சுவடெதுவும் இல்லைஇருவருக்கும் இங்கு ஒருவரை வைத்துஆதாயமாய் ஒன்று இங்கு இருப்பதால்இந்த நாடகமிங்கே தங்கு தடையின்றிபொங்கும் பூம்புனலாய் பொங்கி ஓடுதுஉறவுகளுக்குள்ளே ஒருவரை ஒருவர்மறைமுகமாக மாய்த்திடும் மாயவுலகில்குருதியில் ஏற்படும் பந்தம் எல்லாமிங்குகுணம் கெட்டு நின்று கூத்தாடுகையில்இங்கிவனோ புதுவழி காண துடிக்கிறான்ஏதோ ஒரு புள்ளியிலேதான் இங்கேஇருவருக்கும் இணைப்பென அறிவான்அவ்விணைப்பை இவன் மதிக்கும்போதுஅதை மிதித்தவனை எண்ணி அழுதால்மேன்மையும் உண்டோ இம்மேதினியில்குரல்வளையை நெறிப்பவனை நம்புவான்கூட உறவென்று வருபவனை உதறுவான்ஏதோ ஒன்றினால் அவன் மனதில் கசப்புகசப்பின் காரணம் இவனல்ல என்றறிந்தும்இவனாகவே ஒரு கற்பனையை வளர்ப்பான்எடுத்து இயம்பிட இங்கு எவருமே இல்லைஊர் இரண்டானால் கூத்தாடிக்கு நல்லதாம்இங்கு கூத்தாடி எவனென தெரிந்திடாமல்கூத்திலே மனம் மயங்கியுமே நிற்கின்றான்தன் நிழலையே இவன் நம்பவும் மறுக்கிறான்உள்ளொன்று புறமொன்று பேசும் மனிதரைஎள்ளளவும் நம்பினால் ஏமாற்றம் மிஞ்சுமேஇங்கே இன்னொரு பசு ஏமாந்து நிற்குதேபசுத்தோல் போத்தியதை பசுவென நம்புதேஇரையாகும் போதுதான் வலியை உணருமாவிரித்தது செங்கம்பளமல்ல என புரியுமா
புலிக்குத் தெரியும் பசுவுக்கு வலை விரிக்கபுலி வலை விரிப்பது தன் பசியை போக்கிடஅப்பாவிப் பசுவதும் அதனையும் நம்பிடுதேஎத்தனை காலம்தான் ஏமாற்றுவார்இந்த நாட்டிலேசொந்த நாட்டிலே நம் வீட்டிலேசத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார்சாயம் வெளுத்தாலும் போதையில் இவர் மிதந்துமே கிடக்கிறார்பாரதியும் நினைத்திருந்தால் போதையில் மிதந்திருப்பான்!-சங்கர சுப்பிரமணியன்.
![]()