கவிதைகள்

கந்தசக்ஷ்டி 1ம் நாள் நம்பிடும் அடியார் நற்றுணை நீயே !

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்

மெல்பேண் …. அவுஸ்திரேலியா

 

உருகிடு மடியார் உளமுறை வோனே

மருள் நிலையகல வரமருள் வோனே

கருணையி னுருவாய் திழந்திடு வோனே

கந்தா கடம்பா காத்திடு எம்மை

 

ஆசா னாகியே அப்பனுக் குரைத்தாய்

அறு படையேகி அமர்ந்தே கொண்டாய்

அவ்வைப் பாட்டியின் அருந்தமிழ் சுவைத்தாய்

ஐயா கந்தா அடைக்கலம் நீயே

 

மாறா மனத்தை மாற்றிட வல்லாய்

ஆறா சினத்தை அடக்கியே வைப்பாய்

பாறாங் கல்லென இருப்பார் தம்மை

பக்குவ மாக்குவாய் பரமனின் மைந்தா

 

தாகம் தீர்ப்பாய் வேகந் தடுப்பாய்

மோகம் கலைப்பாய் முறுவல் கொடுப்பாய்

நாளு மாவாய் கோளு மாவாய்

நம்பிடு  மடியார் நற்றுணை நீயே

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *