முனைந்து முயல்வீரா?… கவிதை …. சங்கர சுப்பிரமணியன்.

மழை பொழிகிறதுஉயிர்களுக்கு உதவுமென மழைக்கு தெரியாதுஆறு ஓடுகிறதுஎன்ன பயனென அதுவும் அறிந்திடாதுபயிர் வளர்கிறதுபயனடைவார் உளரென உணர்ந்திடுமோஆதவன் எழுந்தாலும்கடல் நீர் ஆவியாகி மழை பொழியுமன அறிவதில்லைமரங்கள் கனிகளை கொடுத்தாலும்உண்பது யார் எதுவென உணருமாவைரக்கிரீடம் வழங்கினாலும்வறியவர் வயிற்றைக் குளிர்வித்தலுக்கு இணையாமோகுடமுழுக்கு ஆயிரம் செய்தாலும்
வடமிழுத்து அதை வாழ்வின் பயனென்றாலும்வற்றிய வயிறெலாம் வளம்பெறுமாபடைத்துப் பரவசமாய் தொழுதாலும்பட்டினியால் சாவோர் நிலை மாறிடுமாபாமாலை இயற்றி பாடிப்போற்றினாலும்அங்கொருவனுக்கு எழுத்தறிவித்தல் போலாகுமாஇயக்கும் இயற்கையே எதையும் எதிர்பார்த்து இயங்காதபோதுஇயற்கைக்கு புறம்பாய் எதையெதையோ செய்து எதிர்பார்த்தல் தகுமோபடைப்பதை எல்லாம் பத்திரப்படுத்து என்கிறார் பலரும்படைப்பதெலாம் நம் இனத்துக்கு நம்மின மக்களுக்கென்றார் மறுக்கவில்லைபடைத்தவற்றை எல்லாம் இங்கொருவன் அழிக்கின்றானேஇனத்தை இனமக்களை அழிப்பதை முதலில் தடுத்தபின்னேபடைத்ததை பத்திரப்படுத்தி மகிழ்ந்தால் அதிலொரு பொருளுமுண்டுஉண்டு மகிழ மக்களின்றி அவர்களை பறிகொடுத்தபின்னேஉணவு உற்பத்திதனை பெருக்குவதால்ஏதுபயன்பத்திரப்படுத்திதான் என்னபயன்நாம் படைப்பதெல்லாம் இனத்துக்கெனினும்நம் புகழுக்கென்பதுவும் தொக்கி நிற்கிறதேபத்திரப்படுத்துவதும் அதற்கேயன்றோநம் முன்னோர் ஆயிரமாயிரம் படைத்தார்எதவும் நிலையில்லை என உணர்ந்தாரோபத்திரப்படுத்திடவும் மறந்தாரோநாமன்றோ தேடியலைந்தோம்தேடிப்பிடித்ததும் நாமன்றோபத்திரப்படுத்தியதும் நாமன்றோ இன்று படித்து மகிழ்வதும் நாமன்றோஉண்மையில் படைப்பில் உயிரும் உணர்வும் இருக்குமெனில்ஒருநாள் அது உயிர்த்தெழுமேசான்றாக இலக்கியங்கள் பலவுண்டாம் அவை சாதனையாய் இங்கே நிற்பதுண்டாம்பாது காப்போம் இன்று நம்மினத்தைநம்மினம் பாதுகாக்கப்படலே தலையாயதன்றோஇருப்பவை இங்கு ஏராளம்ஆயினும் படைப்போர் தோன்றுவர் பல்லாயிரம்படைத்ததை அவரும் பாதுகாப்பர் இன்று நம்மினத்தை நாம் பாதுகாப்போம்
படைப்பாளிகளே படையுங்கள்பத்திரப்படுத்திய படைப்புக்கள் இங்கே பற்பல உண்டாம்படைப்பதை எல்லாம் பத்திரப்படுத்தும் மும்முரத்தில்பகுதியாவது நீவீர் முனைந்திடுவீர்இனம்காத்துமே பாதுகாக்க முயல்வீரா?
-சங்கர சுப்பிரமணியன்.
![]()