கவிதைகள்

“நான் பொறுப்பல்ல” …. கவிதை ….. சங்கர சுப்பிரமணியன்.

எப்படி எல்லாம் கவிதையை எழுதலாம்என்று எண்ணியதால் வந்த எண்ணமாம்பழமாய் எண்ணம் மனதில் பழுத்ததாம்மாம்பழத்திற்காய் வடித்த கவிதையாம்இத்தகு கவிதையும் கவிதை ஆகுமோகவிதையல்ல என்றாலும் எழுதுகிறேன்இத்தகு கவிதையை பலர் எழுதுவதால்நானும் எழிதினால் எதுவும் தவறில்லைமுக்கனியில் ஒன்றெனில் பொய்யல்லமுத்தமிழில் சொல்லியதும் பொய்யல்லநற்றமிழில் சொல்வதென்றால் இதுவும்நயமிக்க கனியென்பேன் பொய்யாமோஉலகம் உருண்டையென நாம்நினைக்கதட்டையென நம்பவைத்த கனி இதுவாம்இருவருக்கு நடத்தி வைத்த போட்டியில்ஒருவரை அறிவாளியாக்கிய நற்கனியாம்பெற்றோர் சொல்லையேற்று மயில்மீதேறிஉலகைச் சுற்றிவர உடன்பட்டு நின்றகனிஇருவருக்கு போட்டி என்று சொன்னாலும்இளையவனை ஏமாற்றி நின்ற இனியகனிபஞ்சாமிர்தம் என்று பக்தியொடு உண்பார்நெஞ்சார அவனைப் போற்றித் தொழுவார்அபிசேகமாக அவனது மேனியில் தவழவிடஆக்கிய பிரசாதமதில் கலந்திட்ட கனியாம்பிள்ளைகள் அனைவருமே விரும்பம் கனிபெற்றோர் சேர்ந்ததையே விரும்பும் கனிஉற்றார் உறவினரும் ஒன்றாய் நாடும் கனிகற்றோர் கல்லாதோர் விரும்புகின்ற கனிஔவை தந்தது அதியமானுக்கு நெல்லிகனிநாரதன் தந்தான் கலகம்செய்ய இந்தக்கனிஇளையவனை கோபமுற்று ஓடச்செய்த கனிமலைமீது தனியாக நிற்பதற்காய் நின்றகனிமாமரத்தில் கொத்துகொத்தாய் காய்க்குமேகால்லெறிந்தால் மண்ணில் விழ வைக்குமேகொட்டைவரை சுவைத்திடவே இனிக்குமேகொட்டையை புதைத்தாலது முளைக்குமேகாயிலே இனிக்கும் மாங்காய் பல உண்டுகனிந்த பின்னும் புளிக்கும் பழமும் உண்டுஊறுகாய்க்கு ஏற்ற மாங்காய் புளிப்துண்டுநாறுநாறாய் இருக்கும் பழங்களும் உண்டுஇரு இனத்தை ஒட்டவைத்ததால் ஓரினமாம்ஓரினமான பின்பு அதுவே ஒட்டு மாம்பழமாம்கிளிமூக்கு போலிருந்தால் கிளிமூக்கு பழம்கிளிகளும் பழத்தில் தொங்கி கொத்துமாம்பழம்முழுக்க கொட்டையுடன் மாம்பழமாம்மிகச்சிறிய கொட்டையுடனும் மாம்பழமாம்சிறுவர் பாட்டில்வரும் சிறந்த மாம்பழமாம்சினிமா பாட்டில் வந்துதிக்கும் மாம்பழமாம்சீனிமாமா வாங்கித்த சிறந்த நல்ல மாழ்பழம்வேணியக்கா வாங்கிய விலையுயர் மாம்பழம்தின்னவும் இனிக்குதே தெவிட்டாதிருக்குதேமன்னியுடன் தின்னவே மகிழ்வாய் இருக்குதே இப்படி கவிதை எழுதினால் தப்பில்லையெனஅப்புமாமா எனக்கதை சொல்லியும் தந்தாரேசொன்னபடி எழுதினேன் அழகழகு என்றாரேஎன்மனமோ ஏற்கல கவிதையென சொல்லலஏற்பவர் ஏற்கட்டுமிதை புகழ்ந்து தள்ளட்டும்உள்ளதை சொன்னால் அதில் தவறில்லையேநல்லவரே சொல்லுங்கள் இதுவும் கவிதையாகவிதையென நம்பினால் நான் பொறுப்பல்ல.

-சங்கர சுப்பிரமணியன்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *