படைப்பதெலாம் எதற்காக சொல்வீர்!… கவிதை …. சங்கர சுப்பிரமணியன்.

தாயன்புக்கிங்கு விலையுண்டா என்றால்இல்லை என்றே பதிலாய்ச் சொல்வேன்தமிழ் தொண்டுக்கு விலையுண்டா எனில்அதற்கும் சொல்லலாமா இல்லையென்றுவாடகைத்தாய் விலையாக இருப்பதால்வளர்க்கும் பாலுக்கு விலையின்றாமோவழக்கமெலாம் வாடிக்கையாகும் போதில்வழக்குகளாய் மாறுவதும் சத்தியமன்றோ
தமிழில் நூல் எழுதி வெளியிட்டாலதை
வியாபாரம் என்றும் சொல்கின்றார்கள்தமிழில் படம் எடுத்து திரையிட்டாலும்பணம் சம்பாதிக்கும் தொழில் என்பார்தமிழ் தினசரி இதழை தொண்டென்றால்அதையும் ஒரு தொழிலாகவே சொல்வர்தமிழால் வளரும் தொலைக்காட்சி யாவும்கட்டணமாய் பெறுவதும் தொழிலென்பர்தமிழில் இசையமைப்பது பாடுவதெலாம்பணம் சம்பாதிக்கும் ஒரு தொழில்தான்தமிழுக்காய் பேசி அதன் புகழ் பரப்புவதும்அதற்காய் பெறும் பணமும் தொழிலாகும்வருவாய்க்கென எவரும் சொல்லவில்லைபுகழுக்கென்று யாருமே சொல்வதில்லைவிருதுகள் பெறவென்றும் சொல்வதில்லைவீணாகவும் பலர் எதையும் செய்யவில்லைபொழுது போக்காக இங்கு படைப்பதுண்டுஊடகங்கள் கிடைப்பதால் படைப்பதுண்டுஎன்னாலும் முடியுமென்று படைப்பாருண்டுஎதையெதையே படைப்பாய் சொல்வதுண்டுஅப்படி ஒன்றுமில்லையென சொன்னாலும்தொண்டென பலரிங்கே சொல்கின்றனரேஇவர்களை வைத்து தமிழ் வளர்கின்றதோஇவர்கள் வளர்வது தமிழால் இல்லையோபந்தயத்தில் ஓடும் திறனைவைத்து குதிரைவென்றிடுமா என்றறிவர் பந்தயம் கட்டுபவர்படைப்பை வைத்தே உணரப்படுவர் இங்குபடைப்பதும் தமிழ்த் தொண்டுக்கா என்று!
-சங்கர சுப்பிரமணியன்.
![]()