கவிதைகள்

மாற்றாயும் காட்டுமோ?…. ( கவிதை ) …. சங்கர சுப்பிரமணியன்.

மடையர்தம் மடமைகூறி நீக்க முற்படின்கேடுவந்து சூழும் என்பதனை அறிந்த நீமடமையை ஊக்குவிப்பார் அறியாயோமூர்க்கரென அறிந்திடுவாய் நன்னெஞ்சேதீயில் கையைவைத்தால் சுடும் என்றேன்தீயென எழுதி கைவைத்த அறிவாளியும்சுடவில்லை என்று சொன்னால் அவரைமடையரென கூறாது அறிவாளி என்பதாஉலகை சுருட்டி கடலுக்குள் ஓடமுடியுமாஅந்த கடலும் உலகில்தான் உள்ளதெனில்நம்மை தரம்தாழ்ந்தும் நிந்திப்பார் எனில்தரம்தாழ்வது யாரென தரணி நன்கறியுமேபண்புடனே பலவற்றை பகிர்கின்ற போதிலேபண்பறியா மனிதருக்கு பழிப்பதவர் குணம்விண்வெளியில் நீந்தி உலாவரும் ஆதவனைமண்நின்று கல்லெறிய மகிமை குறையுமோநாட்டில் நடப்பதை நற்றமிழில் சொன்னால்பூட்டிவைத்தது அம்பலமாதலால் புலம்பலோபாட்டி சொன்ன கதையிலும் உண்மையுண்டுதீட்டிவைத்த ஓவியம் மாற்றாயும் காட்டுமோ?-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *