கவிதைகள்

கந்தசஷ்டிப் பிரார்த்தனை!… [ 3 ம் நாள் ] …. மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

வேலேந்தி நிற்கின்ற வேலவனே போற்றி

     விண்ணவர்கள் துயர்தீர்த்த வேலவனே போற்றி

     மாலயனும் காணவொணா சிவன்மைந்தா போற்றி

     மனவழுக்கைப் போக்கிடுவாய் வடிவழாகா போற்றி 

 

     தேனான திருநாமம் கொண்டவனே போற்றி

     திருக்கையில் வேலேந்தி நிற்பவனே போற்றி 

     வள்ளை தேவயானையுடன் அமர்ந்தவனே போற்றி

     மனமமர்ந்து நிற்கின்ற மால்மருகா போற்றி 

 

     ஈராறு கரமுடைய எழிலழகா போற்றி

     ஈனமுடை எண்ணமதை எரித்திடுவாய் போற்றி

     பாரமுடை பாவமூட்டை அழித்திடுவாய் போற்றி

     பரம்பொருளாம் சிவன்மைந்தா முருகையா போற்றி .

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *