நடிகர் விஜய் நடத்திய ரகசிய சர்வே

2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் மட்டும் தான் தயாராகிக் கொண்டிருக்கின்றன என்று நினைக்காதீர்கள். நடிகர் விஜய்யும் ஓசையின்றி தயாராகி வருகிறார். இதற்காக அவர் தமிழ்நாடு முழுவதும் ரகசிய சர்வே ஒன்றும் நடத்தி உள்ளார். அதில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அவர் காய்களை நகர்த்துவார் என்கிறார்கள்.

குறிப்பாக அ.தி.மு.க.வில் பதவி சண்டை ஏற்பட்டு எடப்பாடி-ஓ.பி.எஸ் என இரு அணிகளாக பிரிந்த பிறகு, தமிழக அரசியல் களம் எத்தகைய மாற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்பதையே நடிகர் விஜய் உன்னிப்பாக கவனித்து வருகிறாராம். அதற்கு ஏற்பவும் அவரது முடிவுகள் இருக்கலாம் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button