ஆஸ்திரேலியாவுடன் திரைப்பட இணை தயாரிப்பு ஒப்பந்தத்திற்கு இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது!

இந்தியாவின் யூனியன் அமைச்சரவையால் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, இரு நாடுகளின் உற்பத்தியாளர் பங்களிப்புகள் கூட்டாக உற்பத்தி செய்யப்படும் மொத்த மொத்த செலவில் 20% முதல் 80% வரை மாறுபடும்.“உத்தேச ஒப்பந்தம் ஆஸ்திரேலியாவுடனான உறவுகளை அதிகரிப்பது மட்டுமல்லாமல், கலை மற்றும் கலாச்சார பரிமாற்றத்திற்கு வழிவகுக்கும்” என்று இந்திய அரசாங்கம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“இந்தியப் படங்களின் படப்பிடிப்புக்கு விருப்பமான இடமாக ஆஸ்திரேலியா உருவெடுத்துள்ளது. புதிய திட்டங்களைத் தேடும் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கான முக்கிய உள்ளடக்க மையமாக இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தியாவின் ஏராளமான ரம்மியமான இடங்கள், திறமையான சினிமா தொழில்நுட்பம், மலிவான தயாரிப்புச் செலவுகள் என்பன இவ்வளர்ச்சிக்கு சில காரணங்கள். இதனால் இந்தியாவை வெளிநாட்டு திரைப்பட தயாரிப்பாளர்கள் ஒரு விருப்பமான நாடாக தெரிவு செய்கின்றனர்.பங்களாதேஷ், பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இஸ்ரேல், இத்தாலி, நியூசிலாந்து, போலந்து, போர்ச்சுகல், கொரியா, ரஷ்யா, ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியா கொண்டுள்ள 15 இணை தயாரிப்பு ஒப்பந்தங்களுடன் இதுவும் சேர்ந்துகொள்கிறது.இந்தியாவை உலகளாவிய உள்ளடக்க மையமாக நிலைநிறுத்துவதற்கான லட்சியத்தின் ஒரு பகுதியாக, நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒப்பந்தம் இது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ் தயாரிக்கப்படவுள்ள முதல் திரைப்படம் ஆஸ்திரேலிய தயாரிப்பான “தி லாஃப் ஆஃப் லட்சுமி” (The Laugh Of Lakshmi). இத்திரைப்படத்தை ஜான் மேனார்ட் தயாரிக்க எஸ். சக்திதரன் இயக்கவுள்ளார். இது 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இந்தியாவிலும் சிட்னியிலும் படமாக்கப்பட உள்ளது.
![]()