தேர்தல் களத்தில் பஞ்சாயத்து அதிகாரியின் 3 மனைவிகள்!
கிராம பஞ்சாயத்து செயலாளர் ஒருவர் தனக்கு மூன்றாவதாக மனைவி இருப்பதை மறைத்ததை அடுத்து அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாக மத்திய பிரதேச அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய பிரதேசத்தின் சிங்ரவ்லி மாவட்டத்தில் உள்ள கிராம பஞ்சாயத்தின் செயலாளராக இருப்பவர் சுக்ராம் சிங். இவருக்கு குசும்காலி மற்றும் கீதா சிங் என இரு மனைவிகள் உள்ளனர்.
சிங்ரவ்லியில் இருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பிபர்காட் கிராம பஞ்சாயத்து தேர்தலில் சார்பஞ்சாயத்துதாரர் பதவிக்காக
குசும்காலியும், கீதா சிங்கும் ஒருவரை ஒருவர் எதிர்த்து போட்டியிடுவதற்காக மனுத்தாக்கல் செய்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் பெட்ராவில் உள்ள ஜனபத் கிராம பஞ்சாயத்து தேர்தலில் சுக்ராம் சிங்கின் மூன்றாவது மனைவியும் போட்டியிடுகிறார். தனக்கு மூன்றாவதாக ஊர்மிளா என்ற மனைவி இருப்பதை வெளியே தெரியப்படுத்தாமல் இருந்திருக்கிறார்.
ஆனால், பஞ்சாயத்து அதிகாரிகள் தங்களது குடும்ப உறவினர்கள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்ற மத்திய பிரதேச அரசின் அறிவிப்பால் சுக்ராமின் இந்த குட்டு வெளிப்பட்டிருக்கிறது.
அதன்படி, சுக்ராம் குசும்காலி மற்றும் ஊர்மிளாவின் தகவல்களை மட்டும் தெரிவித்துவிட்டு கீதா சிங் குறித்து குறிப்பிடாமல் இருந்திருக்கிறார் தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். ஆனால் தேர்தலில் போட்டிடுவதற்கான மனுவில் மூன்று பெண்களும் தங்களது கணவர் சுக்ராம் சிங்தான் என குறிப்பிட்டிருக்கிறார்கள்.
இது தொடர்பாக அறிந்த தேர்தல் அதிகாரிகள், தனக்கு மூன்றாவதாக மனைவி இருப்பதை மறைத்ததற்காக சுக்ராம் சிங்கை கடந்த ஜூன் 19 அன்று பணியிடை நீக்கமும் செய்து அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்காக நோட்டீஸும் விடுத்துள்ளனர். ஆனால் சுக்ராம் சிங் தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை எனவும் கூறப்படுகிறது.
![]()