இலங்கை

ராஜபக்சக்களின் அரசியல் வரலாற்றை நெல்சன் மண்டேலாவுடன் ஒப்பிட முடியாது; எழுந்துள்ள விசனம்

ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் வரலாற்றைப் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் அரசியல் போராட்டங்களுடன் ஒப்பிட முடியாது என்று இலங்கை தொழிலாளர் மக்கள் முன்னணியின் தலைவர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், “நெல்சன் மண்டேலா தென்னாபிரிக்க மக்களின் உரிமைகளுக்காகவும் இனவெறிக்கு எதிராகவும் போராடியவர்.

நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு

நாட்டைக் கொள்ளையடித்துப் பொருளாதாரத்தைச் சீரழித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவர் சிறைக்குச் செல்லவில்லை என்பதால், அவரது வரலாற்றை ராஜபக்ச குடும்பத்துடன் ஒப்பிடுவது பொருத்தமற்றது.

ராஜபக்சக்களின் அரசியல் வரலாற்றை நெல்சன் மண்டேலாவுடன் ஒப்பிட முடியாது : எழுந்துள்ள விசனம் | Rajapaksas Cannot Be Compared Nelson Mandela

இம்ரான் கான் பாகிஸ்தானின் அரசியல் சூழலில் ஊழலுக்கு எதிராகவும் அரசியல் மாற்றத்துக்காகவும் போராடியவர் என அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர். அவருக்கு எதிரான சட்ட மற்றும் அரசியல் நடவடிக்கைகளை ராஜபக்ச குடும்பத்துடன் ஒப்பிட முடியாது.

ராஜபக்ச குடும்பத்தினர் நாட்டை ஆட்சி செய்த காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல், மோசடி மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகம் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கும் அவர்கள் பொறுப்பாளிகள் எனப் பல்வேறு தரப்பினரால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் முறையான சட்ட ரீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

யார் குற்றவாளி, யார் குற்றமற்றவர் என்பதை நீதிமன்றங்களே தீர்மானிக்க வேண்டும். எனவே, தமது அரசியல் நிலைமையை நியாயப்படுத்துவதற்காக நெல்சன் மண்டேலா மற்றும் இம்ரான் கான் ஆகியோரை முன்னுதாரணங்களாகக் கொண்டு ராஜபக்ச குடும்பத்துடன் ஒப்பிடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *