இலங்கை

22 தொடர்பில் எழுத்துமூல சமர்ப்பணங்களுக்கு பிற்பகல் வரை அவகாசம்

அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்ட மூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான எழுத்துமூல சமர்ப்பணங்களைத் தாக்கல் செய்வதற்கு இன்று (03) வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் 3.00 மணிக்கு முன்னர் அந்த எழுத்துப்பூர்வ சமர்ப்பணங்களைத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டுள்ளது.

அரசியலமைப்பின் 22 வது திருத்தச் சட்ட மூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை நேற்று (02) நிறைவடைந்தது.

மனுக்கள் மீதான விசாரணையை நிறைவு செய்த நீதியரசர்கள் குழாம், அது தொடர்பான எழுத்துப்பூர்வ சமர்ப்பணங்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை இன்றைய தினத்திற்குள் சமர்ப்பிக்குமாறு மனுதாரர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

குறித்த சட்ட மூலத்தின் அரசியலமைப்புத் தன்மை தொடர்பான உயர் நீதிமன்றின் வியாக்கியானம் பாராளுமன்ற சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் அறிவித்துள்ளது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button