இலங்கை

நீதிக்கான நீள்பயணம் அனைவரும் ஆதரவு வழங்குமாறு கோரிக்கை

அனைத்துலக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான ஆவணி 30 ம் திகதி நீதிக்கான நீள்பயணம் எனும் தொனிப்பொருளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை கோரும் தமிழ் தாய்மார்களின் அனைத்துலக மாநாடு வடக்கு கிழக்கின் எட்டு மாவட்டங்களின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இடம்பெறவுள்ளது

இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியம் பரமானந்தம் ,முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்க செயலாளர் திருமதி றஞ்சினிதேவி சசிக்குமார், முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்க உபசெயலாளர் மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோர் முல்லைத்தீவு ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடாத்தி குறித்த மாநாட்டுக்கு ஆதரவு வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர் .

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button