கவிதைகள்
பூக்கள் பூக்காதா… கவிதைகள்… முல்லைஅமுதன்

நகராட்சி சபைக்காக
வீதியின் உயரந்த
மரங்களை வெட்டிக்கொண்டிருந்தார்கள்.
வீதி பெருக்கிச் செல்பவளுக்கு
இனி வேலை இருக்காது.
வெறுமையுடன்,
புதிதாய் மரங்கள் முளைக்காதா
பூக்கள் பூக்காதா
சன்னலோரம் கத்திருக்கையில் மடியிலேறேறி
பயத்துடன்
பதுங்குக்கொண்டது பூனை..
0000000000000000000000
வானொலியில்
இதய கீதம் ஒலிபரப்பாகியது.
இன்றும் சுசிலா
பாடிக்கொண்டிருந்தார்.
மீளவும்
தன்னை நினைவூட்டினாள் அன்பரசி.
கண்கள் தொடர்ந்து
அழுதுதொண்டிருந்தன.
![]()