உலகம்

ஜனாதிபதி தேர்தலை உடன் நடத்தவும்: உக்ரைனின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் வலியுறுத்து

உக்ரைனில் போர் தீவிரமடைந்துள்ள சூழலிலும் தேர்தல்களை நடத்த வேண்டும் என்று அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மைக்கைலோ பெடோரோவ் (Mykhailo Fedorov) கோரிக்கை விடுத்துள்ளார்.

இது, 2022 பிப்ரவரியில் ரஷ்யாவுடன் போர் தொடங்கியதற்குப் பிறகு, ஜனாதிபதி வோலோடிமிர் செலன்ஸ்கியின் நிர்வாகத்திற்கு எழுந்துள்ள மிகப்பெரிய சவாலாகப் பார்க்கப்படுகிறது.

“ஜனநாயகத்தை ரஷ்யாவிடமும் பணயமாக வைக்க முடியாது” என்று 35 வயதான பெடோரோவ் செவ்வாய்க்கிழமை யூடியூபில் (YouTube) வெளியிட்ட வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “நாம் ஒரு சுதந்திரமான ஐரோப்பிய நாடாகத் தொடர்ந்து நீடிக்க விரும்புகிறோம் என்பதற்காகவே போரிட்டு வருகிறோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து உக்ரைனில் இராணுவ ஆட்சி (Martial Law) அமுல்படுத்தப்பட்டுள்ளதால், அந்நாட்டில் அனைத்துத் தேர்தல்களும் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த வீடியோவில் செலன்ஸ்கியின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாத Mykhailo Fedorov , பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்ட ஆறே மாதங்களில், கடந்த ஜூலை மாத இறுதியில் எதிர்பாராதவிதமாகப் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

பெடோரோவின் இந்த வீடியோ குறித்து ஜனாதிபதி செலன்ஸ்கி இதுவரை எந்தப் பதிலும் அளிக்கவில்லை. முன்னதாக, பெடோரோவ் பதவியிலிருந்து நீக்கப்பட்ட சம்பவத்திற்கு எதிராக உக்ரைன் முழுவதும் போராட்டங்கள் வெடித்தது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button