இலங்கை

யாழில் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளுடன் தமிழ் அரசியல் கட்சிகள் சந்திப்பு

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளை தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் சந்தித்து முக்கிய கலந்துரையாடலை மேற்கொண்டனர்.

செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிடும் நோக்கில் யாழ்ப்பாணம் வந்திருந்த ஐரோப்பிய ஒன்றியக் குழுவினர், நேற்று தனியார் விடுதியில் தமிழ் அரசியல் தரப்பினரைச் சந்தித்து கலந்துரையாடினர்.

இந்தச் சந்திப்பில் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம், யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி. மதிவதனி, பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த மாநகர சபை உறுப்பினர்கள், நல்லூர் பிரதேச சபைத் தவிசாளர் மயூரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும், ஈ.பி.ஆர்.எல்.எவ். சார்பில் அக்கட்சியின் கலாநிதி க. சர்வேஸ்வரனும் கலந்துகொண்டு, செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விடயங்கள் மற்றும் தமிழர் சமூகத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்து ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளுடன் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button