உலகம்

பிரித்தானியாவில் குளிர்கால எரிசக்தி தட்டுப்பாடு அபாயம் : ஜாக்டா (Jackdaw) தளத்திற்கு அனுமதி கோரி அவசர வேண்டுகோள்!

வடகடலில் உள்ள ‘ஜாக்டா’ (Jackdaw) எரிவாயு அகழ்வாராய்ச்சி தளத்தில் உற்பத்தியை தொடங்குவதற்கு பிரித்தானிய அரசாங்கம் உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என அதன் உரிமையாளரான ‘அடுரா’ (Adura) நிறுவனம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது.

எதிர்வரும் குளிர்காலத்தில் நாட்டில் ஏற்படக்கூடிய உள்நாட்டு எரிசக்தி பற்றாக்குறையைத் தவிர்ப்பதற்கு இந்த அனுமதி மிக முக்கியமானது என அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

அனுமதி கிடைக்கும் பட்சத்தில், வரும் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் பிரித்தானியாவின் எரிவாயு தேவையில் 6 சதவீதத்தை இந்த தளத்தின் மூலம் பூர்த்தி செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், காலநிலை மாற்றத்திற்கு எதிராகப் போராடும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

உலகளாவிய எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில், புதிய எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வாராய்ச்சிகளுக்கு அனுமதி வழங்குவதா இல்லையா என்ற கடுமையான விவாதத்தை இந்த விவகாரம் பிரித்தானிய அரசியலில் தோற்றுவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button