ஐரோப்பாவில் கடும் வெப்ப அலை; உருகிய போக்குவரத்து சமிக்ஞை விளக்குகள்

ஐரோப்பாவின் கடுமையான வெப்ப அலை பேரழிவை ஏற்படுத்துகிறது: சாலைகள் மற்றும் போக்குவரத்து விளக்குகள் உருகுகின்றன, பள்ளிகள் மூடப்படுகின்றன, ரயில் தண்டவாளங்கள் வளைகின்றன. தீவிர வெப்பம் காரணமாக ஐரோப்பா முழுவதும் போக்குவரத்து விளக்குகள் உருகத் தொடங்கியுள்ளன.
இதன் விளைவாக, பிளாஸ்டிக்கால் ஆன போக்குவரத்து விளக்குகள் உருகி பழுதடைவதுடன், சாலை மேற்பரப்பும் வெடித்துப் பிளக்கின்றன.
முன்னெப்போதும் இல்லாத வெப்ப அலை
இது குறித்த காணொளிகளும் வளியாகியுள்ளது. ஐரோப்பாவில், முன்னெப்போதும் இல்லாத இந்த வெப்ப அலை நிலைமை, மக்கள் சிரமப்படுவதாலும், பல நாடுகளில் நூற்றுக்கணக்கான இறப்புகளை அதிகாரிகள் பதிவு செய்வதாலும் இயல்பு வாழ்க்கையை சீர்குலைத்துள்ளது.
ஜெர்மனியில், அதிக வெப்பநிலையால் தார் மென்மையாகி வளைந்ததால் சாலைகளும் நெடுஞ்சாலைகளும் சேதமடைந்துள்ளன. ஸ்வீடன், பிரிட்டன் உள்ளிட்ட பிற நாடுகளிலிருந்தும் இதேபோன்ற அறிக்கைகள் வெளிவந்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இத்தாலியில், வார இறுதியில் இன்னும் அதிக வெப்பநிலை எதிர்பார்க்கப்படுகிறது. நெதர்லாந்தில், வெப்பநிலை முன்னெப்போதும் இல்லாத 40°C-ஐ நெருங்கியதால், அதிகாரிகள் சிவப்பு எச்சரிக்கைகளை விடுத்ததாக அந்த அறிக்கை மேலும் கூறியது.
இது முதியவர்கள் மற்றும் வெளிப்புறப் பணிகளில் ஈடுபடுவோரின் உடல்நல அபாயங்கள் குறித்த கவலைகளைத் தூண்டியுள்ளது.
![]()