உலகம்

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடக்க விழா!

குழந்தைகள், பெண்கள் பாதுகாப்புக்காக தமிழகத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை  தமிழக முதலமைச்சராக தலைமையில் ஆரம்பமானது.

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றவுடன், குழந்தைகள், பெண்கள் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த அதிரடிப்படையில் இடம்பெறும் பெண் பொலிஸ் மற்றும் பெண் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு நீல நிற சட்டை, காக்கி நிற பேண்ட் என சிறப்பு சீருடை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் கருப்பு நிற தொப்பியும், கருப்பு நிற ஷூவும் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான விழா சென்னை ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் நடைபெற்றுவருகிறது.

சென்னையில் இந்த திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தவுடன், ஒவ்வொரு மாவட்டத்திலும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை பொலிஸார் தங்கள் பணியை தொடங்க உள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button