இந்தியா

பிரக்ஞானந்தாவுடன் செஸ் விளையாடிய தமிழக முதலமைச்சர் விஜய்!

நோர்வே செஸ் போட்டியில் தமிழகத்தின் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை வென்று வரலாறு படைத்தார்.

நோர்வேசெஸ் தொடரை வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அடைந்துள்ள பிரக்ஞானந்தாவுக்கு இந்திய பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் விஜய் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில், கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவை தலைமை செயலகத்திற்கு அழைத்து முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்தார். அப்போது பிரக்ஞானந்தாவுடன் முதலமைச்சர் விஜய் செஸ் விளையாடினார்.

இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பிரக்ஞானந்தா கூறுகையில்,

செஸ் போர்டு எடுத்து வரச்சொல்லி என்னுடன் முதலமைச்சர் விளையாடினார். முதலமைச்சர் செஸ் விளையாடுவார் என்று எதிர்பார்க்கவில்லை.

முதலமைச்சர் விஜய் 50 லட்சம் ரூபா வெகுமதி வழங்கினார். இவ்வாறு அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button