இலங்கை

கருணாவின் பிளவை பயன்படுத்தியவர்; மாவீரன் சலே இறக்க அனுமதிக்க மாட்டோம்; விமல் வீரவன்ச தெரிவிப்பு

புலிகளின் தமிழ்ச்செல்வனின் தலைக்கு மேல் இருந்த புலனாய்வுத் தகவல்களின் உரிமையாளரிடம் பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சானி அபேசேகரவின் சித்திரவதையில் மாவீரன் இறக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். நந்திக்கடல் வெறுப்பு இவ்வாறு நிரப்பப்படுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். சுரேஸ் சலேக்காக குரல் கொடுப்போம் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சலே தொடர்பில் தனது உத்தியோகபூர்வ முகப்பு புத்தகத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

நான் ஒரு எதிர்பாராத சூழ்நிலையில் ‘சலே’ என்பவரை அடையாளம் கண்டுகொண்டேன். கருணா அம்மான் 2004 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து விலகி, புலிகள் அமைப்புக்கு எதிராக போராடினார்.இதன்பின்னர் விடுதலை புலிகள் அமைப்பு கருணா அம்மானை அனைத்து உத்தியோகபூர்வ பதவிகளிலிருந்தும் நீக்கியது. அதன் பின்னர் கருணா அம்மான் தப்பியோடினார்.

இந்தச் செய்தியை அறிந்தவுடன் ஜே.வி.பி தலைவர் சோமவன்ச அமரசிங்க என்னை அழைத்து, உடனடியாக ஜனாதிபதியை சந்தித்து இதுகுறித்து உண்மைத் தன்மையை அறிந்துகொள்ள வேண்டும் என்று கூறினார். நான் உடனடியாக அமைச்சர் மங்கள சமரவீரவை அழைத்தேன். ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க சுமார் அரை மணி நேரத்திற்குப் பிறகு என்னை அழைத்து, ஜனாதிபதி மாளிகைக்கு வருமாறு எங்களுக்கு அழைப்பு விடுத்தார்.

அது சிங்கள புத்தாண்டு காலம். சோமவன்ச அமரசிங்க, நான் மற்றும் நந்தன குணதிலக அல்லது ரில்வின் சில்வா ஜனாதிபதி மாளிகைக்கு சென்றோம். சுமார் அரை மணி நேரத் தாமதத்திற்குப் பிறகு, ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க நாங்கள் தங்கியிருந்த அறைக்கு வந்தார். நிலைமையை விவரிக்குமாறு, ராணுவ தளபதிக்கு அவர் குறிப்பிட்டார். அதை நாங்களும் ஏற்றுக்கொண்டோம். இராணுவ தளபதி அதற்கு அனுமதி வழங்கி, என்ன நடக்கிறது என்பதை வரைபடத்தின் மூலம் விளக்குமாறு எனக்கு முன்னதாக ‘விருப்பமளிக்கும் வகையில் தோன்றிய’ அந்த இளம் ராணுவ அதிகாரியிடம் பொறுப்பை ஒப்படைத்தார்.

அவர் ஒவ்வொன்றாக நடந்த சம்பவங்களின் சங்கிலித் தொடர் குறித்தும், அதற்குள் மறைந்திருக்கும் உண்மைகள் குறித்தும், இலங்கை அரசு ஏன் இந்த போக்கைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்கான காரணம் குறித்தும் கருத்து தெரிவித்தார். கருணா அம்மான் தொடர்பான இந்த சம்பவத்தை முன்வைத்த அந்த இளம் அதிகாரி. நான் இதுவரை கண்டிராத அளவுக்கு மிகவும் சிறப்பாகவும் தொழில்முறை சார்ந்தவராகவும் எனக்குத் தோன்றியதால்,என்னுள் ஒரு தெளிவும் முடிவும் ஏற்பட்டது.

சில நாட்களுக்குப் பிறகு, எனக்குத் தெரிந்த இராணுவ புலனாய்வுப் பிரிவின் நடுத்தர அளவிலான அதிகாரி ஒருவர் என்னை தொலைபேசியில் அழைத்து, என்னை நேரில் சந்திக்க விரும்புவதாகக் கூறினார். என்னால் கொடுக்கக்கூடிய மிக நெருக்கமான நேரத்தை அவருக்குக் கொடுத்தேன். அவர்கள் பொரளையில் உள்ள தேசிய இயக்கத்தின் அலுவலகத்திற்கு வந்தனர். அந்த வீடு டாக்டர் குணதாச அமரசேகரவுக்குச் சொந்தமானது. எனக்குத் தெரிந்த புலனாய்வு அதிகாரியுடன்,அன்று நான் பார்த்த அந்த இராணுவ அதிகாரியும் வந்திருந்தார்.

அவர் வேறு யாருமல்ல, அவர் சுரேஷ் சலே, சலே என்னிடம் ஒரு கோரிக்கையை வைத்தார். ‘கருணா அம்மானை கொழும்புக்கு அழைத்து வந்துள்ளோம். அவருடைய ஆட்களில் இன்னுமொருவரும் இருக்கிறார். ஐரோப்பிய நாடுகளின் அழுத்தம் காரணமாக, கருணா அம்மானை கவனிக்க வேண்டாம் என்று எங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த உத்தரவுக்கு நாங்கள் கீழ்ப்படிய வேண்டும். ஆனால், இந்த வாய்ப்பை தவறவிட்டால் அது ஒரு பெரிய இழப்பாகும். நான் உங்களிடம் ஒரு உதவி கேட்கவே வந்தேன்’ என்றார்.

விடயத்தை கூறுங்கள், என்ன செய்ய வேண்டும்?’ என்றேன் ‘அவருடைய குழுக்களில் ஒன்றை நாம் தடுத்து நிறுத்த வேண்டும். அதற்கு இடம் இல்லை. உங்களால் முடிந்தால் எங்களுக்கு ஒரு பாதுகாப்பான வீட்டைக் கொடுங்கள். அவர்களை சில காலம் பாதுகாப்பாக வைத்திருங்கள்’ என்று சலே குறிப்பிட்டார்.அதற்கு நான் விரைவில் ஒரு நல்ல பதிலை வழங்குவதாக உறுதியளித்தேன்.

பின்னர் இக்கோரிக்கையை ஜே.வி.பி.யின் அரசியல் குழுவிடம் சமர்ப்பித்தேன். சோமவன்ச அமரசிங்க எவ்வித விவாதமும் இன்றி அதற்கு ஒப்புதல் அளித்தார். அந்த வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதன்படி, சுரேஷ் சலே எதிர்பார்த்த உதவியை நாங்கள் நிறைவேற்றினோம்.

அவர் தனக்காகவா எங்களிடம் உதவி கேட்டார்? இந்தச் சம்பவம் அவசியமானது என்றால், ஜனாதிபதியின் உத்தரவை மீறியதாகக் குற்றஞ்சாட்ட முடியாது அல்லவா? ஆனால், அது ஒரு தவறாக இருந்தால், அவர் தனது சுயநல நோக்கத்திற்காக அந்தத் தவறைச் செய்தாரா? இந்த இடத்தில் ஜே.வி.பி.யின் பிரச்சார செயலாளராக இருந்த என்னை அவர் சந்தித்தபோது, அவருக்கு ஜே.வி.பி-யுடன் தேவையற்ற தொடர்பு இருந்தது என்று யாராவது விளக்க முடியுமா? புலனாய்வு அதிகாரிகள் மற்றப் படைகளில் இருந்து வேறுபட்டவர்கள். அவர்கள் சமூகத்தின் நல்ல மற்றும் கெட்ட பக்கங்கள் அனைத்தையும் தொட்டுச் செல்ல வேண்டும். எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும். எங்கள் மீதிருந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே சலே வந்து அந்த உதவியைப் பெற்றார். அவர் அதை நாட்டின் நலனுக்காக, நாடு அமைதியை வெல்ல வேண்டும் என்பதற்காகவே செய்தார்.

அவர் எனக்கு ஒரு அரணாக இருந்தார் என்பது எனக்குத் தெரியும். ஒரு காலத்தில் கோட்டாபய ஆட்சிக் காலத்தில் சலே எனக்கு அவ்வளவு தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், எனக்கு ஒன்று மட்டும் தெரியும். சலே இந்த நாட்டையும் தேசத்தையும் தனது உயிராக நேசித்தார்.

இன்று என்ன நடக்கிறது என்றால், நந்திக்கடல் வெறுப்பை உமிழ்ந்து கொண்டிருக்கிறது. தமிழ்ச்செல்வனின் தலைக்கு மேல் இருந்த புலனாய்வுத் தகவல்களின் உரிமையாளரிடம் பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நினைப்பது போல் இதைச் செய்ய முடியாது. எனவே,ஜே.வி.பி தேசியப் பட்டியலில் இருந்த இப்ராஹிம் விடுவிக்கப்பட்டதும், உண்மை மறைக்கப்பட்டு தேசப்பற்றாளர்கள் பழிவாங்கப்படுகிறார்கள். இதற்கு நாம் பொறுமையாக இருக்க வேண்டுமா?

சி.ஐ.டி பிரிவின் பிரதானி சானி அபேசேகரவின் சித்திரவதையால் சுரேஸ் சலே மரணப் போராட்டத்தில் உண்ணாவிரதம் இருக்கிறார். விசாரணைகளுக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. சானியின் சித்திரவதையில் இருந்து சுரேஸ் சலே விடுபட வேண்டும்..

நம் உயிரைக் காத்த மாவீரர்களைப் பாதுகாப்பது நமக்கு ஒரு சுமையல்ல. எந்தவொரு விசாரணைக்கும் நாங்கள் இடையூறு செய்ய மாட்டோம். ஆனால், ஓய்வுபெற்று ,நீண்ட காலம் கைவிடப்பட்ட ஒரு நபரின் சித்திரவதையில் மாவீரன் இறக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். நந்திக்கடல் வெறுப்பு இவ்வாறு நிரப்பப்படுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் எனத் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button