இலங்கை

இரண்டு நீதிமன்றங்களில் தேடப்படும் பசில்! CID அதிரடிப் பாய்ச்சல்

ஏற்கனவே மாத்தறை நீதவான் நீதிமன்றம் பசில் ராஜபக்சவை கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில் மற்றுமொரு உத்தரவை நேற்றையதினம்(29) கோட்டை நீதவான் பசன் அமரசேன பிறப்பித்தார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு ஊவா மாகாண சபை தேர்தல் பிரசாரத்திற்காக, சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்திற்குச் சொந்தமான 7.8 மில்லியன் ரூபாய் பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டது.

எனினும், இவர்களைக் கைது செய்வதற்காக குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் வீடுகளுக்குச் சென்றபோது, சந்தேகநபர்கள் எவரும் அங்கு இல்லை என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அரச நிதியில் 12,000 டி-சேர்ட்டுகள் (T-shirts) அச்சிடப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்கள நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியது.

அந்த டி-சேர்ட்டுகளின் ஒரு பக்கத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புகைப்படமும், மறுபக்கத்தில் அரசியல் கட்சியொன்றின் பெயரும் அச்சிடப்பட்டு, மொனராகலை மாவட்டத்தில் நடைபெற்ற அரசியல் பொதுக்கூட்டம் மற்றும் பிரசாரங்களின்போது அவை விநியோகிக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button