உலகம்
ஹிஸ்புல்லா அமைப்பினரை இலக்கு வைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் ;12 பேர் பலி

லெபனான் நாட்டில் இஸ்ரேல் நேற்று (26) நடத்திய வான்வழித் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
லெபனானின் கிழக்கு பகுதியில் பிஹா பள்ளத்தாக்கு அமைந்துள்ள இடத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் எத்தனை ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்தனர் என்பது பற்றிய தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
ஹிஸ்புல்லா குழுவை நோக்கி லெபனான் முழுவதும் மிகவும் தீவிரமான தாக்குதல்களை நடத்துவதற்குத் தான் ஒப்புதல் அளித்திருப்பதாக இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு கூறியதைத் தொடர்ந்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
![]()