இந்தியா
2.90 கோடி ரூபாவில் 40 புதிய சேவை வாகனங்கள்!

சென்னை தலைமைச் செயலகத்தில் வைத்தியம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்தறை சார்பில் 2.90 கோடி ரூபா மதிப்பீட்டில் வாங்கப்பட்ட 40 புதிய வாகனங்களின் சேவையை தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கி வைத்தார்.
ஊரக நலப்பணிகள் இயக்ககத்திற்கு வாங்கப்பட்ட 40 புதிய வாகனங்களின் சேவையை கொடியசைத்து முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து, வாகனத்தின் திறன் மற்றும் இயக்கத்தை பரிசோதிக்க ஒரு வாகனத்தை தானே ஓட்டி பார்த்து முதலமைச்சர் விஜய் சோதனை செய்தார்.
இதையடுத்து வாகன ஓட்டுநர்களுக்கு வாகனத்தின் சாவியை முதலமைச்சர் ஜோசப் விஜய் வழங்கினார்.
![]()