இந்தியா

அதானி மீதான குற்றச்சாட்டுகளை நிரந்தரமாக கைவிட்ட அமெரிக்க நீதித்துறை

அமெரிக்க நீதித்துறை அதானி மீதான குற்றச்சாட்டுகளை நிரந்தரமாக கைவிட்டது.

அமெரிக்க நீதித்துறை (DOJ) இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி மற்றும் அவரது உறவினர் சாகர் அதானி மீது இருந்த securities மற்றும் wire fraud குற்றச்சாட்டுகளை நிரந்தரமாக கைவிட்டுள்ளது.

அமெரிக்க தடைகளை பொருட்படுத்தாமல் ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா
அமெரிக்க தடைகளை பொருட்படுத்தாமல் ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா
Eastern District of New York நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையில், வழக்கு “dismissed with prejudice” என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பொருள், இந்த வழக்கு மீண்டும் திறக்கப்பட முடியாது.

2024-இல் தொடங்கிய இந்த வழக்கு, இந்தியாவில் சூரிய ஆற்றல் திட்டங்களைப் பெறுவதற்கான 265 மில்லியன் டொலர் மதிப்பிலான லஞ்ச ஒப்பந்தம் மற்றும் அதனை முதலீட்டாளர்களிடமிருந்து மறைத்தது என்ற குற்றச்சாட்டுகளை மையமாகக் கொண்டது.

ஆனால், விசாரணையில் அமெரிக்க தொடர்புகள் தெளிவாக இல்லை என்றும், குற்றச்சாட்டுகளை நிலைநிறுத்த போதுமான ஆதாரங்கள் இல்லை என்றும் கண்டறியப்பட்டது.

அதேபோல், U.S. Treasury Department’s OFAC ஈரான் LPG இறக்குமதி தடைகள் மீறல் தொடர்பான வழக்கில் 275 மில்லியன் டொலர் அபராதம் விதித்து சமரசம் செய்தது.இந்த வழக்குகள் அனைத்தும் கடந்த சில நாட்களில் முடிவுக்கு வந்துள்ளதால், அதானி குழுமத்தின் உலகளாவிய விரிவாக்கத் திட்டங்களுக்கு ஏற்பட்டிருந்த சட்ட சிக்கல்கள் நீங்கியுள்ளன.

ஈரான் எண்ணெய் மீதான தடைக்கு அமெரிக்கா தற்காலிக விலக்கு
ஈரான் எண்ணெய் மீதான தடைக்கு அமெரிக்கா தற்காலிக விலக்கு
அமெரிக்க நீதித்துறை, இந்த வழக்கை தொடர தேவையில்லை என்று தெரிவித்துள்ளது.

இது அமெரிக்க securities சட்டங்களை வெளிநாட்டு செயல்பாடுகளுக்கு பயன்படுத்தும் முயற்சி தோல்வியடைந்ததைக் காட்டுகிறது என சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button