உலகம்

வேல்ஸில் ஒரு நூற்றாண்டு கால ஆதிக்கம் முடிவுக்கு வருகிறதா? – தொழிற்கட்சி தோல்வியடையும் என எதிர்பார்ப்பு!

வேல்ஸ் நாடாளுமன்றத் (Senedd) தேர்தலில் ஆளும் தொழிற்கட்சி (Labour) பெரும் பின்னடைவைச் சந்திக்கும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒரு நூற்றாண்டுகால அரசியல் வரலாற்றில் இது ஒரு முக்கிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.

கடந்த 1922-ஆம் ஆண்டு முதல் வேல்ஸ் அரசியலில் அசைக்க முடியாத சக்தியாகத் திகழ்ந்து வரும் தொழிற்கட்சி, இம்முறை தனது ஆட்சியை இழக்கும் நிலையில் இருப்பதாகப் பல கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

1999-ஆம் ஆண்டு வேல்ஸ் நாடாளுமன்றம் உருவாக்கப்பட்டதில் இருந்து கடந்த 27 ஆண்டுகளாகத் தொழிற்கட்சியே அங்கு ஆட்சி செய்து வருகிறது.

இந்நிலையில், தற்போதைய தேர்தல் முடிவுகள் அக்கட்சிக்கு எதிராக அமையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது நடந்தால், பிரித்தானிய அரசியலில் இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாற்றமாக அமையும்.

‘பிளைட் சிம்ரு’ (Plaid Cymru) மற்றும் ‘ரிஃபார்ம் யூகே’ (Reform UK) ஆகிய இரு கட்சிகளும் முதலிடத்தைப் பிடிக்கக் கடும் போட்டியில் உள்ளன.

வேல்ஸின் முதலமைச்சர் எலுனெட் மோர்கன் தனது சொந்தத் தொகுதியிலேயே தோல்வியடையும் அபாயம் உள்ளதாகக் கூறப்படுகிறது.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, குடிவரவு தொடர்பான பிரச்சினைகள் மற்றும் மத்திய அரசான டவுனிங் ஸ்ட்ரீட் மீதான அதிருப்தி ஆகியவை தொழிற்கட்சியின் பின்னடைவுக்கு முக்கியக் காரணங்களாகக் கருதப்படுகின்றன.

நேற்று (வியாழக்கிழமை) வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றது. முடிவுகள் இன்று மாலைக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button