நள்ளிரவில் தவெக தலைவர் விஜய்க்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

விஜய்யின் கட்சிக்கு தனது சட்டமன்ற உறுப்பினர் ஆதரவளிப்பதாகக் கூறி, போலியாகத் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படும் கடிதம் தொடர்பாக, ஏஎம்எம்கே பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், டிவிகே மீது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளார்.
டிவிகே-வுக்கு ஆதரவு தெரிவித்து ஏஎம்எம்கே எம்எல்ஏ ஒருவர் “சுயமாகவும் மகிழ்ச்சியாகவும்” கடிதம் எழுதியதாகக் கூறும் காணொளிய விஜய்யின் கட்சி பகிர்ந்த ஒரு மணி நேரத்திற்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நள்ளிரவில் பரபரப்பு
எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக பதவி ஏற்க ஆதரவளிப்பதாக மன்னார்குடி தொகுதியில் அ.ம.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எஸ்.காமராஜ் கடிதம் அளித்துள்ளார்.
அதனை அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆளுநரை நேரில் சந்தித்து கடிதத்தை வழங்கினார். இந்த நிலையில், கடிதம் அளித்து விட்டு செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி. தினகரன் பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார்.
அ.ம.மு.க. எம்.எல்.ஏ. ஆதரவு எங்களுக்கு உள்ளது என்று கவர்னரிடம், த.வெ.க. சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டு உள்ளது. அ.ம.மு.க. எம்.எல்.ஏ. காமராஜை காணவில்லை. அவர் விலை போய் இருக்கலாம் என்றார். விஜய் பதவி வெறியில் இருக்கிறார்.
த.வெ.க. குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது என்றும் கூறினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
தவெகவின் காணொளி
இந்த சூழலில், அ.ம.மு.க. எம்.எல்.ஏ. எஸ்.காமராஜ் மக்கள் மாளிகைக்கு வருகை தந்துள்ளார். இதனை தொடர்ந்து, டி.டி.வி. தினகரன் மீண்டும் மக்கள் மாளிகைக்கு சென்று கவர்னரை நேரில் சந்தித்து பேசினார்.
இதனால், நள்ளிரவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காமராஜை தொடர்பு கொள்ள முடியவில்லை என டி.டி.வி. தினகரன் பரபரப்பு குற்றச்சாட்டு கூறியிருந்த நிலையில், அவர்கள் இருவரும் மக்கள் மாளிகைக்கு சென்றனர்.
காமராஜை காணவில்லை என கவர்னரிடம் முறைபாடு அளித்திருந்த நிலையில், இருவரும் சேர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.
அதனை தொடர்ந்துதமிழகத்தில் டிவிகே ஆட்சி அமைப்பது குறித்த உயர் அழுத்த நாடகங்களுக்கு மத்தியில், விஜய்யின் கட்சியினர் AMMK MLA காமராஜின் எழுத்துப்பூர்வ ஆதரவைக் கூறி காணொளியைப் பகிர்ந்துள்ளனர்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் ஒப்புதலுடன் தமிழக வெற்றிக் கழகத்திற்கு காமராஜ் ஆதரவு அளித்து வருவதாக டிவிகே தெரிவித்துள்ளது.
![]()