இலங்கை

மகிந்தவை சிறையிலடைக்க முயன்றால் கடும் விபரீதம்! கொழும்பிற்கு மிகப்பெரிய கூட்டம் வருமென எச்சரிக்கை

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை ஏதேனும் குற்றச்சாட்டின் கீழ் சிறையிலடைக்க முயன்றால் கடும் விபரீதமான பின்விளைவுகள் ஏற்படும் என்று திஸ்ஸகுட்டி ஆரச்சி எச்சரித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு சொந்தமான டொரிங்க்டன் இல்லம் கொள்வனவு செய்யப்பட்ட விவகாரத்தில் மோசடி நடைபெற்றுள்ளதாக வெளியாகும் தகவல்கள் குறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போது அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

அனைவரும் நிம்மதியாக வாழ வழி செய்தவர்

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ச இந்நாட்டின் மதிப்பிற்குரிய பெருமகன்களில் ஒருவர். யுத்தத்தை நிறைவு செய்து குண்டுகள் வெடிக்கும் பயங்கர சூழலை மாற்றியமைத்தவர். இன்றைய அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட அனைவரும் நிம்மதியாக வாழ வழி செய்தவர்.

மகிந்தவை சிறையிலடைக்க முயன்றால் கடும் விபரீதம்! கொழும்பிற்கு மிகப்பெரிய கூட்டம் வருமென எச்சரிக்கை | Tissakutty Arachchi Warning

 

நாமல் ராஜபக்ச தேர்தலில் போட்டியிட்ட போது கிடைத்த வாக்குகளைக் கொண்டு மகிந்த ராஜபக்சவுக்கு சொற்பமான மக்களின் ஆதரவு மட்டுமே இருப்பதாக அரசாங்கம் கருத முயன்றால் அது தவறாகும். நாமலின் தேர்தல் பெறுபேறு வேறு, மகிந்த ராஜபக்சவுக்கான ஆதரவுத் தளம் வேறு.

எனவே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீது ஏதாவது ஒரு குற்றச்சாட்டை முன்வைத்து அவர் மீது கைவைக்க அரசாங்கம் துணியுமாக இருந்தால் இலட்சக்கணக்கான பொது மக்கள் அரசாங்கத்துக்கு எதிராக கொழும்பில் அணிதிரள்வார்கள் என்பதை கூறிக் கொள்ள விரும்புகின்றேன் என்றும் எச்சரித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button