இந்தியா

புதுச்சேரியில் மீண்டும் என்டிஏ கூட்டணி ஆட்சி

புதுச்​சேரி​யில் மீண்​டும் தேசிய ஜனநாயகக் கூட்​டணி (என்​டிஏ) ஆட்சி அமை​கிறது. ஐந்​தாவது முறை​யாக ரங்​க​சாமி முதல்​வ​ராகிறார்.

புதுச்​சேரி​யில் புதுச்​சேரி, காரைக்​கால், மாஹே, ஏனாம் என 4 பிராந்​தி​யங்​கள் உள்​ளன. இதற்​கான சட்​டப்​பேர​வைத் தேர்​தல் கடந்த ஏப்​.9-ம் திகதி நடை​பெற்​றது.

இங்கு ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணிக்​கும் இண்​டியா கூட்​ட​ணிக்​கும் இடையே கடும் போட்டி நில​வியது. என்​டிஏ கூட்​ட​ணி​யில் என்​.ஆர்​.​காங்​கிரஸ், பாஜக, அதி​முக, புதி​தாக உரு​வான லட்​சிய ஜனநாயகக் கட்சி உள்​ளிட்​டவை இடம்​பெற்​றன.

இண்​டியா கூட்​ட​ணி​யில் காங்​கிரஸ் – திமுக இடையே ஏற்​பட்ட மோதலால் தொடக்​கம் முதலே பெரும் குழப்​பம் நில​வியது.

திமுக போட்​டி​யிட்ட 5 தொகு​தி​களில் காங்​கிரஸ் வேட்​பாளர்​களும் நிறுத்​தப்​பட்​டனர். அத்​துடன் இடது​சா​ரி​கள் தனித்​துப் போட்​டி​யிட்​டன. விசிக​வுக்கு ஒதுக்​கிய தொகு​தி​யில் காங்​கிரஸ், இடது​சா​ரி​கள் போட்​டி​யிட்​டன.

இந்​நிலை​யில், தமிழகம், புதுச்​சேரி உட்பட 5 மாநிலங்​களில் பதி​வான வாக்​கு​கள் நேற்று எண்​ணப்​பட்​டன.

புதுச்​சேரி​யில் தொடக்​கம் முதலே என்​டிஏ கூட்​டணி முன்​னிலை வகித்​தது. முதல் சுற்றில் 17 தொகுதிகளில் வாக்குகள் எண்ணப்பட்டன.

இதில்தட்​டாஞ்​சாவடி​யில் என்​.ஆர்​.​காங்​கிரஸ் நிறு​வனர் ரங்​க​சாமி, முத்​தி​யால்​பேட்​டை​யில் வையாபுரி மணி​கண்​டன், ஏனாமில் மல்​லாடி கிருஷ்ணா​ராவ், அரி​யாங்​குப்​பத்​தில் அய்​யப்​பன், நெட்​டப்​பாக்​கத்​தில் பேர​வைத் துணைத் தலை​வர் ராஜவேலு, வில்​லியனூரில் ரவிக்​கு​மார், ஏம்​பலத்​தில் மோகன் தாஸ்,காரைக்​கால் வடக்​கில் அமைச்​சர் திரு​முரு​கன் , லாஸ்​பேட்​டை​யில் சிவக்​கொழுந்து ஆகியோர் வென்றனர்.

மண்​ணாடிப்​பட்​டில் பாஜக வேட்​பாளர் அமைச்​சர் நமச்​சி​வா​யம், நிரவி டி.ஆர்​.பட்​டிணத்​தில் மீனாட்சி சுந்​தரம் ஆகியோர் வென்​றனர்.

உப்​பளம் தொகு​தி​யில் அதி​முக மாநில செய​லா​ளர் அன்​பழகன் வென்​றார். காங்​கிரஸ் கட்​சி​யில் ஊசுடு தொகு​தி​யில் கார்த்​தி​கேயன் வென்​றார். நெல்​லித்​தோப்​பில் திமுக வேட்​பாளர் கார்த்​தி​கேயன் வென்​றார்.

சுயேச்சை​களில் மாஹே​யில் அசோக்​கு​மார், நெடுங்​காட்​டில் விக்​னேஷ்வரன், கதிர்​காமத்​தில் அழகு ( எ) அழகானந்​தம் ஆகியோர் வென்​றனர்.

இதைத்​தொடர்ந்து 2-வது சுற்று வாக்கு எண்​ணிக்கை 13 தொகு​தி​களில் நடைபெற்றது. அதி​லும் என்​டிஏ கூட்​ட​ணியே முன்​னிலை பெற்​றது.

இக்​கூட்​ட​ணி​யில் என்​.ஆர். காங்​கிரஸில் மங்​கலம் தொகு​தி​யில் ரங்​க​சாமி, உழவர் கரை​யில் நாராயண​சாமி, இந்​திரா நகரில் ஏகேடி ஆறு​முகம் வெற்றி பெற்​றனர். பாஜக​வில் முதலி​யார் பேட்​டை​யில் ஜான்​கு​மார், திருநள்​ளாறில் ஜிஎன்​எஸ் ராஜசேகரன் ஆகியோர் வெற்றி பெற்​றனர். காம​ராஜ் நகரில் லஜக தலை​வர் ஜோஸ் சார்​லஸ் மார்ட்​டின் வென்​றார்.

இண்​டியா கூட்​ட​ணி​யில் திமுக​வில் காரைக்​கால் தெற்​கில் நாஜிம், பாகூரில் செந்​தில்​கு​மார், காலாப்​பட்​டில் செந்​தில், ராஜ்பவனில் விக்​னேஷ் கண்​ணன் ஆகியோர் வென்​றனர். மணவெளி தொகு​தி​யில் ராமு, திரு​புவனை​யில் சாய் சரவணன் ஜெ குமார் ஆகியோர் தவெக சார்​பில் போட்​டி​யிட்டு வெற்றி பெற்​றனர். தவெக கூட்​ட​ணி​யில் இடம்​பெற்​றுள்ள நேயம் மக்​கள் கழகத்​தின் தலை​வர் நேரு உருளை​யன்​பேட்​டை​யில் வெற்றி பெற்​றார்.

என்​.ஆர்​.​காங்​கிரஸ் 12, பாஜக 4, அதி​முக 1, லஜக 1 என 18 தொகு​தி​களில் வெற்றி பெற்​றதன் மூலம் மீண்​டும் என்​டிஏ கூட்​டணி ஆட்​சி​யமைக்​கிறது. கூட்​டணி தலை​வர் ரங்​க​சாமி 5-வது முறை​யாக முதல்​வ​ராகிறார்.

திமுக 5 தொகு​தி​களில் வெற்றி பெற்று எதிர்க்​கட்​சி​யாகிறது. காங்​கிரஸ் ஒரு இடத்​தில் மட்​டுமே வென்​றுள்​ளது. வெற்றி பெற்ற 3 சுயேச்​சைகளில் 2 பேர் என்​டிஏ கூட்​ட​ணிக்கு நெருக்​க​மானவர்​கள். அதனால் இக்​கூட்​ட​ணிக்கு ஆதரவு தெரிவிக்க வாய்ப்​புள்​ளது. முதல்​வர் ரங்​க​சாமி தட்​டாஞ்​சாவடி, மங்​கலம் ஆகிய இரு தொகு​தி​களி​லும் வென்​றுள்​ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button