இந்தியா
மக்களின் தீர்ப்பை ஏற்கிறோம்!; உதயநிதி ஸ்டாலின்

தமிழக சட்டசபை தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றார். அதற்கான சான்றிதழைப் பெற்றுக் கொண்டார்.
இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
சேப்பாக்கம் தொகுதியில் என்னை இரண்டாவது முறையாக தேர்வு செய்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்கள் தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறோம். நாளை சட்டமன்ற உறுப்பினர்களுடன் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்த உள்ளனர்.
ஸ்டாலின் வழியில் செயல்படுவோம். வெற்றிக்காக உழைத்த திமுகவினருக்கு நன்றி.
மக்கள் ஒரு முடிவு எடுத்து இருக்கிறார்கள். அதை ஏற்றுக்கொள்கிறோம்.
வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்களுக்கும், புதிதாக பொறுப்பேற்க இருக்கும் அரசுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறோம் என தெரிவித்தார்
![]()