உலகம்

ஐரோப்பாவில் 10,000 யூரோக்களுக்கு மேல் பணமாக செலுத்த தடை!

2027 முதல், பணமூலம் நடைபெறும் பரிவர்த்தனைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் 10,000 யூரோக்கள் வரை உச்சவரம்பை நிர்ணயிக்கிறது. 3,000 யூரோக்களுக்கு மேல் உள்ள பணப்பரிவர்த்தனைகளுக்கு அடையாளச் சரிபார்ப்பு கட்டாயமாகும்.

இதன் நோக்கம் பணமோசடி மற்றும் தீவிரவாத நிதியுதவியை கட்டுப்படுத்துவது. ஆனால் பிரான்ஸ் போன்ற நாடுகள் தங்களது குறைந்த வரம்புகளைத் தொடரலாம் இங்கு ஏற்கனவே 1,000 யூரோ வரம்பு உள்ளது.

ஏற்கனவே 1,000 யூரோ வரம்பு உள்ளது

15,000 யூரோ மதிப்புள்ள ஆடம்பர பொருட்களை பணமாக வாங்குவது அல்லது பணமாகவே பெரிய சேவைகளுக்கான கட்டணத்தை செலுத்துவது இனி ஐரோப்பாவில் சாத்தியமில்லை.

2024 ஆம் ஆண்டு, ஐரோப்பிய ஒன்றியம் 2024/1624 என்ற சட்டத்தை நிறைவேற்றியது. இது 2027 ஜூலை 10 முதல் அமுலுக்கு வரும். இந்த நடவடிக்கை பணமோசடி எதிர்ப்பு சட்டத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

இந்த வரம்பு தொழில்முறை விற்பனையாளர்கள் (கடைகள், நிறுவனங்கள், கைத்தொழிலாளர்கள்) உடன் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே பொருந்தும். தனிநபர்களுக்கிடையிலான பரிவர்த்தனைகள் இதில் சேராது. முக்கியமாக ஆடம்பர கார்கள், ஆடம்பர கப்பல்கள், தனியார் விமானங்கள், மற்றும் சில நிலம்சார்ந்த பரிவர்த்தனைகள் கவனத்தில் கொள்ளப்படுகின்றன.

மேலும், 3,000 முதல் 10,000 யூரோக்கள் வரை பணமாக செலுத்தும் போது, விற்பனையாளர்கள் வாங்குபவரின் அடையாளத்தை சரிபார்க்க வேண்டும். ஜெர்மனி போன்ற நாடுகளில் இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஆனால் பிரான்சில் இது பெரிதாக மாற்றமில்லை, ஏனெனில் இங்கு ஏற்கனவே 2015 முதல் 1,000 யூரோக்கள் வரம்பு அமுலில் உள்ளது. பிரான்சில் சில விதிவிலக்குகள் , தனிநபர்களுக்கிடையிலான பரிவர்த்தனைகள், வங்கி வசதி இல்லாதவர்கள், மற்றும் பிரான்சில் தற்காலிகமாக இருக்கும் வெளிநாட்டு பயணிகளுக்கு 10,000 யூரோக்கள் வரை அனுமதி உண்டு.

இந்த புதிய ஐரோப்பிய விதி, தற்போதைய பிரான்ஸ் சட்டத்தை விட தளர்வானதாகும். நாடுகள் தங்களது குறைந்த வரம்புகளை வைத்திருக்க அனுமதிக்கப்படுகின்றன. இந்த மாற்றத்திற்கு முன்பு, ஐரோப்பிய நாடுகளில் விதிகள் வெவ்வேறாக இருந்தன. ஜெர்மனியில் எந்த வரம்பும் இல்லை, ஆனால் இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் 2,000 முதல் 15,000 யூரோக்கள் வரை மாறுபட்ட வரம்புகள் இருந்தன.

இந்த வேறுபாடுகள் குற்றவாளிகளுக்கு சட்டத் துளைகளை உருவாக்கின. 2024 சட்டத் திட்டத்தின் ஒரு பகுதியாக, ALBC என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இது பணமோசடி மற்றும் தீவிரவாத நிதி கட்டுப்பாட்டை கண்காணிக்கும் ஐரோப்பிய அமைப்பாகும்.

இது ஜெர்மனியின் ஃபிராங்க்பர்டில் அமைந்துள்ளது மற்றும் 2025 முதல் செயல்படுகிறது. மேலும், 2029 முதல் பெரிய கால்பந்து கிளப்புகளும் வங்கிகள் போலவே கடுமையான பணமோசடி எதிர்ப்பு விதிகளை பின்பற்ற வேண்டும்.

அவர்கள் முதலீட்டாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பரிவர்த்தனைகளின் நிதி மூலத்தை சரிபார்க்க வேண்டும். முன்பு, கால்பந்து துறை இந்த விதிகளில் இருந்து பெரும்பாலும் விலக்கப்பட்டிருந்தது.

இதனால் சில பெரிய பணமோசடி நடவடிக்கைகள் கண்காணிப்பை தவிர்த்தன. இறுதியாக, 50 மில்லியன் யூரோக்களுக்கு அதிகமாக சொத்துகள் கொண்டவர்களுக்கு கூடுதல் கண்காணிப்பு விதிக்கப்படும். இது ஒரு வரி அல்ல, ஆனால் அவர்களின் பணத்தின் மூலமும் பரிவர்த்தனைகளும் அதிகமாக ஆய்வு செய்யப்படும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button