இந்தியா

உச்சக்கட்ட பரபரப்பில் தமிழகம்…!; 234 தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (04-05-2026) நடைபெறவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 23 ஆம் திகதி இடம்பெற்றது.

இந்தநிலையில் 234 தொகுதிகளிலும் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணிக்கை
இதனடிப்படையில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (04) நடைபெறவுள்ளது.

வாக்கு எண்ணும் மையங்களில் மட்டும் 18,000 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 40-இற்கும் மேற்பட்ட துணை இராணுவப் படையினர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

வாக்கு எண்ணும் பணிகள் காலை எட்டு மணிக்கு அஞ்சல் மூல வாக்கு எண்ணிக்கையுடன் தொடங்கும்.

வாக்குப்பதிவு
இதையடுத்து, காலை 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு மூலம் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை தொடங்கும்.

அனைத்து சட்டமன்றத் தொகுதிகளின் சுற்று வாரியான முடிவுகள், சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரால் அந்தந்த மையங்களில் உள்ள பொது ஒலிபெருக்கி அமைப்பு மூலம் அறிவிக்கப்படவுள்ளது.

உச்சக்கட்ட பரபரப்பில் தமிழகம்...! 234 தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை தொடக்கம் | Tamil Nadu Assembly Election 2026 Results Update

மேலும், தேர்தல் முடிவுகளை https://tnelections2026.in/results.html என்ற இணையதளத்திலும் பார்வையிட முடியும் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பலாலி காவல்துறையினர் பாதுகாப்புக் கடமைகளையும் இனங்களுக்கு இடையிலான நல்லுறவையும் ஏற்படுத்தவே செயற்படுகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button