உலகம்

ஈரானுக்கு கடும் நிபந்தனை விதித்த அமெரிக்கா ; வான்வழித் தாக்குதல்கள் தொடர்பில் வெளியான தகவல்

ஈரான் சமர்ப்பித்துள்ள புதிய அமைதி ஒப்பந்தத்தின் குறிப்பிட்ட விடயங்களை தான் இன்னும் முழுமையாகப் பரிசீலிக்கவில்லை என்றாலும், அதனை ஏற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரானியத் தரப்பானது இதுவரையில் “போதுமான அளவு பெரிய இழப்பீட்டை வழங்கவில்லை” என்பதே இதற்கு அவர் காரணமாகக் குறிப்பிட்டுள்ளார்.

 

இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் தொடங்கிய போரை முடிவுக்குக் கொண்டுவர முயற்சிக்கும் அதே வேளையில், மீண்டும் வான்வழித் தாக்குதல்களைத் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் அதிபர் சமூக வலைத்தளங்களில் கருத்துப் பகிர்ந்துள்ளார்.

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது: “ஈரான் எமக்கு அனுப்பியுள்ள திட்டத்தை நான் விரைவில் பரிசீலிப்பேன்.

ஆனால், கடந்த 47 ஆண்டுகளில் அவர்கள் மனிதகுலத்திற்கும் உலகிற்கும் ஏற்படுத்திய அழிவிற்காக இன்னும் போதுமான இழப்பீட்டை வழங்காததால், இந்த முன்மொழிவு ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.

” அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீதான குண்டுவீச்சுகளை நான்கு வாரங்களுக்கு முன்பு நிறுத்தி வைத்திருந்தாலும், உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் உடன்பாட்டை எட்டுவதில் இன்னும் சிக்கல் நீடிக்கிறது.

முதலில் ஹோர்முஸ் நீரினையை திறக்க வேண்டும் மற்றும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும் என்று ஈரான் முன்மொழிந்துள்ளது.

தங்களது அணுசக்தித் திட்டம் குறித்த விவாதங்களை பின்னர் ஒரு திகதிக்கு ஒத்திவைக்க அவர்கள் எதிர்பார்க்கின்றனர். இருப்பினும், ஈரான் வசம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியக் கையிருப்பை அகற்றும் வரை போரை நிறுத்தப் போவதில்லை என்பதில் வொஷிங்டன் பிடிவாதமாக உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button