இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் அதிரடித் திருப்பம்; அஸாத் மௌலானாவை விசாரிக்க ஷானி அபேசேகர பிரான்ஸ் பயணம்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்காகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் குழுவொன்று பிரான்ஸுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாதுகாப்பு வட்டாரங்களின் தகவல்படி, இந்தப் பயணத்தின் முக்கிய விவரங்கள் வருமாறு:-

தற்போது வெளிநாட்டில் வசித்து வரும், பிள்ளையானின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் அஸாத் மௌலானாவிடம் நேரடி விசாரணைகளை முன்னெடுப்பதே இக்குழுவின் முதன்மை நோக்கமாகும்.

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக அஸாத் மௌலானாவினால் முன்வைக்கப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் மற்றும் திடுக்கிடும் வெளிப்படுத்தல்கள் குறித்து மேலதிக விளக்கங்களையும், விரிவான வாக்குமூலங்களையும் அதிகாரிகள் கோரி வருகின்றனர்.

சர்வதேச ரீதியில் முன்னெடுக்கப்படும் இந்தப் புலனாய்வு முயற்சியானது, தாக்குதல்களின் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகளை அடையாளம் காண்பதற்கான ஒரு முக்கிய நகர்வாகக் கருதப்படுகின்றது.

இருப்பினும், இந்த இரகசியப் பயணம் மற்றும் விசாரணைகள் குறித்துக் குற்றப் புலனாய்வுத் திணைக்களமோ அல்லது பாதுகாப்பு அமைச்சோ இதுவரை அதிகாரபூர்வமான தகவல்கள் எதனையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *