இலங்கை

தமிழகத்தில் தொப்புள் கொடி உறவுகளால் ஈழத்தமிழருக்கு நேர்ந்த கதி: அரங்கேறிய கொடூரம்

இந்தியாவில் இலங்கை கடற்றொழிலாளர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் குறித்த காணொளி ஒன்று வெளியாகிப் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பி இருந்தது.

தொப்புள்கொடி உறவு என்று ஒருபுறம் பேசப்பட்டாலும் கடலில் வாழ்வாதாரப் போட்டியின் போது ஈழத்து கடற்றொழிலாளர் மீது தமிழகக் கடற்றொழிலாளர்கள் தாக்குதல் நடத்தியிருப்பது இரு நாட்டுத் தமிழ் மக்களிடையேயான உணர்வுப் பிணைப்பைச் சிதைத்துள்ளது.

காலம் காலமாக இரு நாட்டு கடற்றொழிலாளர்களுக்கு இடையே நிலவும் எல்லைப் பிரச்சினை, தற்போது ஒருவரை ஒருவர் சித்திரவதை செய்யும் அளவிற்குப் போயிருப்பது ஈழத்து கடற்றொழிலாளர்களின் பாதுகாப்பைத் தமிழகக் கடற்பரப்பில் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது.

இந்தத் தாக்குதல் விவகாரம் இலங்கை தமிழ் மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் ஆதங்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் கடற்றொழிலாளர்கள் உட்பட அரசியல் தலைமைகள் வரை குறித்த சம்பவத்திற்குப் பெரும் கண்டனத்தை வெளியிட்டு வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *