இலங்கை
கிளிநொச்சியில் காணாமல்போன ஆட்கள் தொடர்பிலான சாட்சியங்கள் பதிவு

கிளிநொச்சியில் அமைந்துள்ள காணாமல்போன ஆட்களை பதிவு செய்வதற்கான பிராந்திய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (24) காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான சாட்சியங்களின் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த அலுவலகத்தினால் கிளிநொச்சி மாவட்டத்தில் காணாமல் போனவர்களின் இதுவரை பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு இதுவரை விசாரணை இடமெறாதவர்களுக்கான விசாரணைகள் நடைபெற்றன.
ஏற்கனவே பதிவுகளை மேற்கொண்டவர்களில் நூறு பேர் வரையில் அழைக்கப்பட்டு வெள்ளி காலை முதல் அவர்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
![]()