இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தமாக JVPயிடம் கேளுங்கள்! மகிந்தவின் திட்டம்

இந்த வருடம் ஆட்சியை பிடிப்பதற்கான பாரிய திட்டம் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லயில் உள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை அலுவலகத்தில் இன்று(20) நடைபெற்ற புத்தாண்டு நிகழ்வுகளில் கலந்து கொண்டதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் நாமல் ராஜபக்சவின் கருத்துப்படி ஜேபிவி தான் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தமாக பொறுப்புக் கூற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

குறிப்பாக மகிந்த ராஜபக்சவுக்காக அதனை செய்தார்களா இல்லை வேறு ஏதாவது காரணத்திற்காக செய்தார்களா என்பதை இப்ராஹிம் உள்ளிட்ட தரப்பினரிடம் கேட்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *