இலங்கை
77 ஆண்டுகளாக இனவழிப்புக்குள்ளாகும் ஈழத் தமிழருக்கு நிரந்தர தீர்வு கிட்ட இந்தியா உடன் தலையிட வேண்டும்; புதிய அரசியல் அமைப்பில் தமிழ்த் தேசத்தை அங்கீகரிக்கவும் உதவுங்கள்

இலங்கைத்தீவில் கடந்த 77 ஆண்டுகளாக இனவழிப்புக்கு முகம்கொடுத்துவரும் ஈழத்தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வு ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்கு இந்தியாவின் தலையீட்டினை கோரிநிற்பதாக தமிழ்த் தேசியப் பேரவை தெரிவித்துள்ளது.
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனை நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணியளவில் தமிழ்த்தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் கொழும்பு தாஜ் சமூத்திரா ஹோட்டலில் சந்தித்துக் கலந்துரையாடினர்.
![]()