உலகம்
ஈரானுக்கு ஆயுதங்கள் இல்லை; அமெரிக்காவுக்கு கிடைத்த உத்தரவாதம்

ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது எனும் உத்தரவாதத்தை அமெரிக்காவுக்கு சீனா அளித்துள்ளது.
ஈரானுக்கு அடுத்த ஓரிரு வாரங்களில் புதிதாக வான் வெளி பாதுகாப்பு அமைப்புகளை சீனா வழங்க ஆயத்தமாகி வருவதாக உளவுத் துறை தகவல் வந்திருந்த நிலையில், அமெரிக்கா – சீனா இரு நாட்டுத் தலைவர்களிடையேயான கடிதம் வழியிலான தொடர்பில் இந்த உத்தரவாதத்தை சீனா அளித்திருக்கிறது.
இது குறித்து அமெரிக்க அரசின் போர் விவகாரங்களுக்கான அமைச்சர் பீட் ஹெக்செத் தெரிவித்திருப்பதாவது, “ஜனபதிபதி ட்ரம்ப்புக்கு சீன அதிபர் ஸி ஜின்புங்குடன் ஒரு வலுவான மற்றும் நேரடி தொடர்புள்ளது. அதைப் பற்றி அவர்கள் இருவரும் விவாதித்தனர்.
அப்போது, அந்த உத்தரவாதத்தை எங்களிடம் சீனா அளித்தது” என்றார்.
![]()